எஸ். பி. சண்முகநாதன்

தமிழக அரசியல்வாதி

எஸ். பி. சண்முகநாதன் என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னாள் அமைச்சராவார். இவர் தூத்துக்குடி மாவட்டம் பண்டாராவிளையைச் சேர்ந்தவர் இவர் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 1996-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் ஜவுளி மற்றும் கைத்தறி துறை மந்திரியாக பதவி வகித்தார். பின்பு 2011-ம் ஆண்டு இதே தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பணிபுரிந்து இருக்கிறார்.

  • அடுத்த நடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் இதே தொகுதியில் வெற்றி பெற்று பால்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1]
  • பின்பு அவ்வாண்டே முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுகவில் இருந்து விலகினார். தமிழக அமைச்சரவையில் 2016 ஆகத்து 29 அன்று நடந்த மாற்றத்தில் சண்முகநாதன் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "புதிய அமைச்சர்கள் வாழ்க்கை குறிப்பு". தினத்தந்தி. 29 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 29 மே 2016.
  2. "தமிழக அமைச்சரவையில் மாற்றம்: புதிய அமைச்சராகிறார் மாஃபா பாண்டியராஜன் - இன்று மாலை பதவியேற்பு விழா". செய்தி. தி இந்து. 30 ஆகத்து 2016. பார்க்கப்பட்ட நாள் 31 ஆகத்து 2016.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._பி._சண்முகநாதன்&oldid=3644393" இலிருந்து மீள்விக்கப்பட்டது