ஏரியல் விரிகுடா தீவுகள்

ஏரியல் விரிகுடா தீவுகள் ( Aerial Bay Islands) என்பவை அந்தமான் தீவுகளில் உள்ள ஒரு தீவுக்கூட்டம் ஆகும். இந்தியாவின் ஒன்றியப் பகுதிகளில் ஒன்றான அந்தமான் நிக்கோபார் தீவுகள் நாட்டின் வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மாவட்ட நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதியாகும். இத்தீவுக் கூட்டத்தில் சிமித் தீவு மட்டுமே பெரியதும் குடியிருப்புப் பகுதியுமாகும்[1].

புவியியல் தொகு

13° 18′ 0″ வடக்கு மற்றும் 93° 1′ 48″ கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் ஏரியல் விரிகுடா தீவுகள் அமைந்துள்ளன. சாதம் தீவு. ரோசு தீவு, ஆக்சு தீவு முதலியன இங்குள்ள பிற தீவுகளாகும்[2].

நிர்வாகம் தொகு

திக்லிபூர் தாலுக்கா நிர்வாகத்தின் கீழுள்ள ஒரு பகுதியாக, ஏரியல் விரிகுடா தீவுகள் இயங்குகின்றன[3].

மக்கள் தொகையியல் தொகு

இத்தீவுகளில் உள்ள மூன்று கிராமங்களில் மொத்தமாக 600 நபர்கள் வசிக்கின்றனர்.

மேற்கோள்கள் தொகு

  1. "Village Code Directory: Andaman & Nicobar Islands" (PDF). Census of India. பார்க்கப்பட்ட நாள் 2011-01-16.
  2. pic
  3. "DEMOGRAPHIC – A&N ISLANDS" (PDF). andssw1.and.nic.in. Archived from the original (PDF) on 2017-08-28. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏரியல்_விரிகுடா_தீவுகள்&oldid=3546632" இலிருந்து மீள்விக்கப்பட்டது