ஐயை என்னும் பெயர் பூண்டு வாழ்ந்த பழங்கால மகளிர் இருவர்.

ஒருவர் தித்தன் மகள் ஐயை. [1] இந்த இளவரசி தன் கால்களில் முத்துப் பரல்களைக் கொண்ட சிலம்பு, கழுத்தில் ஆம்பல்-பூ மாலை, கைகளில் சங்குகளை அறுத்துச் செய்த வளையர், தோள் என்னும் மார்பில் பொன்னை இழைத்துச் செய்யப்பட்ட அணிகலன்கள் ஆகியவற்றை அணிந்திருந்தாளாம்.

மற்றொருவர் சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவையில் வரும் ஐயை. மற்றும் சிலப்பதிகாரம் காவுந்தி அடிகளைக் “காவுந்தி ஐயை” எனக் குறிப்பிடுகின்றது. [2]

குன்றத்தில் குரவையாடும் மகளிர் தம் தெய்வம் கொற்றவையைப் பரவும்போது “ஐயை” என விளித்துப் பரவுகின்றனர். [3]

சொல் விளக்கம் தொகு

தமிழில் ஐ என்னும் உரிச்சொல் வியப்பு என்னும் பொருளைத் தரும்.தொல்காப்பியம் உரியியல்
ஐ என்னும் பெயர்ச்சொல் தலைவனை உணர்த்தும். [4]
தலைவனைக் குறிக்கும் இந்த ஐ என்னும் பெயரிலிருந்து தோன்றிய சொற்கள் ஐயன், ஐயனார்(அய்யனார்), ஐயப்பன், ஐயை போன்றவை.
இவற்றில் ஐயை என்பது பெண்பாற்பெயர். ஏனையவை ஆண்பாற்பெயர்கள். ஆய் என்பது தாயைக்குறிக்கும் சொல். ஆய்ஆய் =தாயின் தாய் . அதாவது பாட்டி. ஆய் என்பது ஐ என மாறி ஆய் ஆய் என்பது ஐயை என மரூவியது. ஐயை என்பதுபாட்டியைக் குறிக்கும் சொல். ஐயை என்பது நமது தாய்வழி தொன்மையான பெண் தெய்வத்தின் பெயர்.

அடிக்குறிப்பு தொகு

  1. அரிபெய் சிலம்பின் ஆம்பலம் தொடலை அரம் போழ் அவ் வளைப் பொலிந்த முன்கை இழையணி பணைத்தோள் ஐயை தந்தை மழைவளம் தரூஉம் மாவண் தித்தன் – பரணர் பாடல் அகநானூறு 6
  2. தோமறு கடிஞையும் சுவல்மேல் அறுவையும் காவுந்தி ஐயைக் கைப்பீலியும் கொண்டு மொழிப்பொருள் தெய்வம் வழித்துணை ஆகு(க) என – சிலப்பதிகாரம் 10 நாடுகாண் காதை காவுந்தி ஐயையைக் கைதொழுது ஏத்தி – 15 அடைக்கலக்காதை.
  3. வாய்வாட் கொற்றவை, அமரி, குமரி, கவுரி, சமரி, சூலி, நீலி, மாயவற்கு இளங்கிளை, ஐயை, செய்யவள், - முதலானவை
  4. என் ஐ முன் நில்லன்மின் தெவ்விர் பலர் என் ஐ முன் நின்று கல் நின்றவர் – திருக்குறள்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐயை&oldid=2995893" இலிருந்து மீள்விக்கப்பட்டது