கங்கா பரணி வாசுதேவன்

கங்கா பரணி வாசுதேவன் (Ganga Bharani Vasudevan)(கங்கா பரணி என்றும் அழைக்கப்படுகிறார்) என்பவர் இந்திய வலைப்பூக்கள் பதிவர்-எழுத்தாளர் ஆவார்.[1] இவர் ஜஸ்ட் யூ, மீ அண்ட் எ சீக்ரெட் (2012), எ மினிட் டு டெத் (2015), எ சிப் ஆஃப் லவ் அண்ட் எ சிப் ஆஃப் காபி (2016) மற்றும் மர்டர் இன் தி எலிவேட்டர் (2018) ஆகிய புத்தகங்களை எழுதியவர் ஆவார்.

கங்கா தொழில்நுட்ப ஆய்வாளராகவும் உள்ளார்.
தொழில்வலைப்பதிவர்; எழுத்தாளர்
வகைபுனைகதை-திகில் கதை, காதல் கதை
குறிப்பிடத்தக்க படைப்புகள்ஏ சிப் ஆப் லவ் அண்டு காபி (2016)
ஏ மிண்டி டொ டெத் (2015)
ஜஸ்ட் யூ, மீ அண்டு எ சீக்கரட் (2012)
இணையதளம்
gangabharani.com

சுயசரிதை தொகு

சிறுவயதில், செய்தித்தாள்களின் கருத்துக்களைப் படிக்கவும் எழுதவும் கங்காவை அவரது தந்தை ஊக்கப்படுத்தினார்.[2] கக்கா தனது 15 வயதில் என் எக்சுஜிஎன் (NXGN)-ல் உங்கள் கருத்து பகுதியில் கட்டுரைகள் குறித்து கருத்துகளை எழுதத் தொடங்கினார்.[2][1] இவர் 2006-ல் வலைப்பதிவு செய்யத் தொடங்கினார். செய்தித்தாள்களால் ஏற்றுக்கொள்ளப்படாத விடயங்களில் தொடங்கி எழுத ஆரம்பித்தார்.[2][3][1] சுமார் ஐந்து வருடங்கள் கழித்து சிறுகதைகள் எழுத ஆரம்பித்து புத்தகம் எழுதும் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார்.[1] இவர் தனது முதல் புத்தகத்தின் முதல் அத்தியாயத்தினை தனது வலைப்பதிவில் எழுதினார்.[4][2] வெளியீட்டாளர்களிடமிருந்து பல நிராகரிப்புகளுக்குப் பிறகு, புத்தகம் எழுதுவது பற்றி வெளியீட்டாளர் ஒருவர் இவரைத் தொடர்பு கொண்டார்.[1][2]

கங்கா தனது வலைப்பதிவில் பல்வேறு போட்டிகளைக் கண்டுள்ளார். மேலும் 2015ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியம் வலைப்பதிவு விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டார்.[2] இவரது சிறுகதை ஒன்று பீம்பம் என்ற குறும்படமாக எடுக்கப்பட்டுள்ளது.[2] இவரது இரண்டு குறும்படங்கள், டைனி இசுடெப்சு அண்டு கேண்டில் (Tiny Steps and Candles), வீ கேர் (WE CARE) திரைப்பட விழாவில் விருதுகளை வென்றன.[2]

கங்கா தொழில்நுட்ப ஆய்வாளராகவும் உள்ளார்.[5][3][6]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்கா_பரணி_வாசுதேவன்&oldid=3673353" இலிருந்து மீள்விக்கப்பட்டது