கச்சி அநேகதங்காவதம்

அநேகதங்காவதீஸ்வரர் திருக்கோயில் தொகு

ஸ்தல சிறப்பு தொகு

அநேகதம்-யானை முகத்துடைய விநாயகர் இறைவனை வழிபட்ட ஸ்தலம். இங்குசிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.விநாயகர் ,வல்லபையை மணம் முடித்த ஸ்தலம். காஞ்சி 5 ஸ்தலங்களுள் ஒன்று. குபேரன் வழிபட்ட ஸ்தலம் .சுந்தரர் தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 4வது ஸ்தலம். 274 சிவாலயங்களில் இது 237வது தேவாரஸ்தலம் ஆகும். இத்தலம் 1000 - 2000 வருடங்களுக்கு முன்றையது .

இறைவன் கச்சி அநேகதங்காவதேஸ்வரர்
இறைவி காமாட்சி
தீர்த்தம் தானுதீர்த்தம்
திருவிழா: மகாசிவராத்திரி, திருக்கார்த்திகை

ஸ்தல புராணம் தொகு

மரீசி மகரிஷியின் மகள் வல்லபை சிவபக்த்தியை. அவளை இரண்ய அசுரன் கேசி பிடித்து சென்றான். அவள் தன்னை காத்தருளும்படி சிவனிடம் வேண்டினாள். அம்பிகை சிவனிடம் ,விநாயகன் அசுரர்களை அழித்து வெற்றி பெற அருளவேண்டும் என்றாள். விநாயகரும் அசுரர்களை அழிக்க செல்லும்முன் இங்கு லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டு சென்று வல்லபையை மீட்டார். சிவனும் அம்பிகையும் விநாயகருக்கு இந்த ஸ்தலத்தில் வல்லபையை மணம்முடித்து வைத்து வாழ்த்தினர்.

வழித்தடம் தொகு

காஞ்சி பேருந்து நிலையம் -புத்தேரி தெருவழி கைலாயநாதர் கோயில் செல்லும் வழி .

"https://ta.wikipedia.org/w/index.php?title=கச்சி_அநேகதங்காவதம்&oldid=2256515" இலிருந்து மீள்விக்கப்பட்டது