கந்தர்வக்கோட்டை பாளையம்

பாளையக்காரர்


கந்தர்வகோட்டை பாளையம் என்பது, தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த "கோமாபுரம்" என்ற ஊரை தலைமை இடமாகக் கொண்ட ஜமீன் ஆகும். இது "அச்சுதப்பண்டாரத்தார்" என்ற பட்டம் பூண்ட கள்ளர் மரபினரால் ஆளப்பட்டது.[1]

வரலாறு தொகு

1879 ஆம் ஆண்டு, இவர்களின் கீழ் 53 கிராமங்கள் இருந்தன (54468 ஏக்கர் பரப்பளவு). அரசாங்கத்திற்கு கொடுத்த இறைப்பகுதி 6577 ரூபாய் 4 அணா 11 பைசா ஆகும். 400 ஆண்டுகள் பழைய அரண்மனை முற்றிலும் இடிபாடுகளுடன் உள்ளது.[2][3]

புதுக்கோட்டை அரச குடும்பத்துடன் திருமண உறவு மூலம் கந்தர்வகோட்டை ஜமீன்கள் இணைந்திருந்தார்கள்.[4]

1967 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக, இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக ராஜா ராமச்சந்திர துரை அச்சுதப்பண்டாரத்தார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]

பண்டைகால தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்களான குறவர் இனமக்களை, கந்தவர்கோட்டை பாளையக்காரர்கள் தங்களுடைய முகவர்களாக நியமித்திருந்தார்கள்.[6]

முடிவுரை தொகு

கந்தர்வக்கோட்டை ஜமீன் பகுதியானது சுதந்திரத்திற்கு பிறகு கலைக்கப்பட்டு கந்தர்வகோட்டை வட்டமாக மாற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தோடு இணைக்கப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. கள்ளர் சரித்திரம். சென்னை: Jegam & Co, Dodsin Press. 1923. பக். 91. https://archive.org/details/kallar-sarithiram/page/n99/mode/1up. 
  2. மூவேந்தர் குல தேவர் சமூக வரலாறு. 1976. பக். 319. https://archive.org/details/THFmuvendharPinnA/mode/1up. 
  3. Madras District Gazetteers Tanjore Vol-I. 1906. பக். 193. https://archive.org/details/in.ernet.dli.2015.210633/page/n2/mode/1up?q=. 
  4. Chiefs And Leading Families. 1923. பக். 14. https://archive.org/details/tva-bok-0013484-chiefs-and-leading-families-1/mode/1up. 
  5. "Statistical reports of assembly elections". Election Commission of India. Archived from the original on October 5, 2010. பார்க்கப்பட்ட நாள் July 8, 2010.
  6. Madras District Gazetteers Tanjore Vol-I. 1906. பக். 262. https://archive.org/details/in.ernet.dli.2015.210633/page/n2/mode/1up?q=.