கம்பம் நந்தகோபலன் கோவில்

கம்பம் நந்தகோபாலன் கோவில் என்பது தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, கம்பம் சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள கண்ணன் கோவிலாகும். இந்தக் கோயிலில் மூலவர் சிற்பமாக அல்லமல், மாட்டுத் தொழுவமே இறைவனாக வணங்கப்படுகிறது. கொடி மரத்துக்கே அனைத்து வழிபாடுகளும் செய்யப்படுகின்றன.

இந்த கோவில் ஏராளமான மாடுகள் வளர்க்கப்படுகின்றன. இவை அனைத்தும் கோவிலுக்குச் சொந்தமானவையாகும். இவற்றிலிருந்து பட்டத்துக் காளை தேர்ந்தெடுக்கப்படுகின்றது. இந்த கோவில் தொடர்பான அனைத்து முக்கிய நிகழ்வுகள் மற்றும் விழாக்களிலும் இந்த பட்டத்துக் காளைக்கே முதல் மரியாதை வழங்கப்படும்.

இந்த பட்டத்துக் காளை இறந்துவிடின் வேறொரு கன்று பட்டத்துக் காளையாகத் தேர்ந்தெடுக்கப்படும். இறந்த காளை சகல மரியாதைகளுடனும் அடக்கம் செய்யப்படும். பரிபூரண அலங்காரங்களுடன் ஊர் முழுவதும் சுற்றி எடுத்து வரப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை: தொகு

கோவிலுக்கு சொந்தமான திடலில் ஒரு கரும்பு கட்டு வைக்கப்படும். கோவிலில் வளரும் அனைத்துக் கன்று குட்டிகளும் அங்கே அழைத்துவரப்பட்டு கட்டவிழ்த்துவிடப்படும். எந்த கன்று முதலில் அந்த கரும்பில் வாய் வைக்கின்றதோ அதுவே அடுத்த பட்டத்துக் காளையாக முடி சூட்டப்படும். இது அப்பகுதி மக்களால் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

வழிபாடுகளும் சிறப்புகளும்: தொகு

இங்கு ஒவ்வொரு வார சனிக்கிழமை, அமாவாசை, கிருஷ்ண ஜெயந்தி மற்றும் பொங்கல், மாட்டுப் பொங்கல் போன்ற தினங்கள் மிகவும் சிறப்பாகக்

கொண்டாடப்படுகின்றது. இங்குள்ள மாடுகளுக்கு அகத்திக் கீரை கொடுத்தால் பித்ருக்கள் சாபம் நீங்கும் என்பது ஐதீகம். அதே போன்று இங்கு கம்பளி போட்டு எடுப்பதும் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.

பயண வசதி தொகு

சென்னையிலிருந்து தேனி அல்லது கம்பம் நகருக்குச் செல்ல வேண்டும். தேனியில் இருந்து தொடர்ச்சியாகக் கம்பம் செல்ல பேருந்து வசதி இருக்கிறது.