கலாமண்டலம் கல்யாணிகுட்டி அம்மா

இந்திய நடனக் கலைஞர்

கலாமண்டலம் கல்யாணிகுட்டி அம்மா (Kalamandalam Kalyanikutty Amma) (1915-1999) என்பவர் தென்னிந்தியாவின் கேரளாவிலுள்ள மலப்புறம் மாவட்டத்தில் திருநாவாய் என்ற ஊரிலிருந்து வந்து மோகினியாட்டத்தில் ஒரு சகாப்தத்தை உருவாக்கிய பெண் நடனக் கலைஞராவார். மோசமான, அழிந்துபோன நிலையில் இருந்த மோகினியாட்டத்தை ஒரு முக்கிய இந்திய பாரம்பரிய நடனமாக உயிர்ப்பிப்பதில் இவர் முக்கிய பங்கு வகித்தார். இது முறையான கட்டமைப்பு மற்றும் அலங்காரமாக வழங்கப்பட்டது. [1] கல்யாணிகுட்டி அம்மா 1999 மே 12 அன்று தனது 84 வயதில் காலமானார்.

கலாமண்டலம் கல்யாணிகுட்டி அம்மா

கேரள கலாமண்டலத்தின் ஆரம்பகால மாணவர்களில் ஒருவரான கல்யாணிகுட்டி அம்மா, மறைந்த கதகளி நிபுணர் பத்மசிறீ கலாமண்டலம் கிருஷ்ணன் நாயர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். [2] 78 வயதான கிருட்டிண பணிக்க ஆசானிடமும் இவர் மோகியாட்டத்தை கற்றார். சமசுகிருதத்தில் முதுகலை பாடநெறிமுறைகளுக்கு சில கையெழுத்து பிரதிகளை தேடினார். கலாமண்டலத்தில் சேருவதற்கு முன் இலக்கியம்,விளையாட்டு மற்றும் யோகா ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டிருந்தார். நடனக்கலையைக் கற்க இவரது குடும்பம் இவரை அனுமதிக்கவில்லை. கவிஞர் வள்ளத்தோள் நாராயண மேனன் இவரது குடும்பத்தை சமாதானபடுத்தி கலாமண்டலத்தில் சேர்த்தார். 1939இல் இவரது முதல் அரங்கேற்றம் நடைபெற்றது. இவர் கதகளி நடனத்தையும் கலாமண்டலம் கிருட்டினன் நாயர் மற்றும் பத்திகம்தோடி இராவுன்னி மேனன் ஆகியோரிடம் கற்றுகொண்டார். மேலும் பல கோயில்களுக்குச் சென்று தேவதாசி நடைமுறைகளைப் பற்ரித் தெரிந்து கொண்டார். [3] கல்யாணிகுட்டி அம்மா எழுதிய இரண்டு புத்தகங்களில், "மோகினியாட்டம் - வரலாறு மற்றும் நடன அமைப்பு" என்பது மோகினியாட்டத்தின் விரிவான மற்றும் ஒரே உண்மையான ஆவணமாக கருதப்படுகிறது. [4] இவரது சீடர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் இவரது மகள்கள் சிறீதேவி ராஜன் மற்றும் கலா விஜயன், மிருணாளினி சாராபாய் மற்றும் தீப்தி ஓம்சேரி பல்லா ஆகியோர் இருந்தனர்.

கேரள சங்கீத நாடக அகாதமி மற்றும் கேந்திர சங்கீத நாடக அகாதமி விருதுகள் இரண்டையும் பெற்ற கல்யாணிகுட்டி அம்மா 1999 மே 12 அன்று திரிபூணிதுறையில் (தம்பதியர் குடியேறிய இடத்தில்) தனது 84 வயதில் காலமானார். இவரது மகன் கலாசலா பாபு ஒரு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகராக இருந்தார். அதே நேரத்தில் இவரது பேத்தி சுமிதா ராஜன் ஒரு பிரபலமான மோகினியாட்டம் கலைஞர் ஆவார்.  

பிரபல கவிஞர் வள்ளத்தோள் நாராயண மேனனிடமிருந்து இவருக்கு 'கவாயித்ரி' என்ற விருது கிடைத்தது. 1986 ஆம் ஆண்டில் கேரள கலாமண்டல சக் ஊழியர் கௌரவத்தைப் பெற்றார்.  


கல்யாணிகுட்டி அம்மா இந்தியாவுக்கு அப்பால் மோகினியாட்டக் கலையை கொண்டு சென்றார். இவரிடம் பயின்ற முதல் உருசிய மோகினியாட்ட நடனக் கலைஞர் மிலானா செவர்ஸ்காயா என்பவர் ஆவார். [5] 1997 ஆம் ஆண்டில், கலாமண்டலம் கல்யாணிகுட்டி அம்மா, மோகினியாட்டத்தின் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக அவரை ஆசீர்வதித்தார். இந்தியாவுக்கு வெளியே உள்ள முதல் மோகினியாட்டப் பயிற்சிப்பள்ளியிலிருந்து உருசியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் மிலானா செவர்ஸ்காயா உருவாகினார். இவர் நாட்டிய அரங்கினை நிறுவினார். அங்கு இவரது நினைவாக அர்ப்பணிக்கப்பட்ட நாடகத்தில் கலாமண்டலம் கல்யாணிகுட்டி அம்மா என்ற நடனத்தை நடத்தப்படுகிறது. மிலானா செவர்ஸ்காயாவின் குரு கல்யாணிகுட்டி அம்மாவின் நினைவாக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு திரைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் தனது குரு வயதான காலத்திலும் மோகினியாட்ட நடனத்தை எவ்வாறு கற்றுக் கொடுத்தார் என்பதைக் தெரிவித்துள்ளார். [6]

குறிப்புகள் தொகு

  1. Sahapedia (2017-02-15), Remembering Kalamandalam Kalyanikutti Amma, பார்க்கப்பட்ட நாள் 2018-06-18
  2. "Unsung legends who resurrected two dying arts of Kerala". The Hindu. 2014-04-10. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/unsung-legends-who-resurrected-two-dying-arts-of-kerala/article5894374.ece. பார்த்த நாள்: 2018-06-17. 
  3. https://mywordsnthoughts.com/myworld/all-about-kerala/kalamandalam-kalyanikutty-amma-mother-of-mohiniyattam-keralas-traditional-dance-form/
  4. . 2017-02-07. 
  5. "YOUTHEXPRESS 18/10/1996". www.milana-art.ru. பார்க்கப்பட்ட நாள் 2018-06-17.
  6. Milana Mandira Severskaya (2014-05-07), Mandira. Mohini Attam In Russia - true story., பார்க்கப்பட்ட நாள் 2018-06-17