கல்குடா

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம்

கல்குடா (Kalkudah) என்பது மட்டக்களப்பிலிருந்து 35 கி.மி. தொலைவில் வட மேற்கில் அமைந்துள்ள ஓர் கரையோர பிரதேசமாகும். புகழ்பெற்ற உல்லாச பயணிகளைக் கவரும் இடமாக இருந்த இது ஈழப் போர் இடம் பெற்றதனால் இதன் உல்லாச பயணிகளை இழந்தது. 2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் மேலும் நிலைமையை மோசமாக்கியது. ஈழப் போர் முடிவுற்றதும் இப்பகுதி உல்லாச பயணிகளை உள்வாங்கும் இடமாக மாறி வருகின்றது. கல்குடாவும் பாசிக்குடாவும் அருகருகே அமைந்துள்ளன. இதன் சனத் தொகை 2383 ஆகும்.இப் பிரதேசம் வாழைச்சேனை பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசமாகும் [1]

கல்குடா
நாடுஇலங்கை
மாகாணங்கள்கிழக்கு மாகாணம்
மாவட்டங்கள்மட்டக்களப்பு
பிரதேச செயலாளர் பிரிவுகோரளைப் பற்று வாழைச்சேனை

உசாத்துணை தொகு

  1. "Statistical Information". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 12 சூன் 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்குடா&oldid=3548243" இலிருந்து மீள்விக்கப்பட்டது