கல்யாணி தாக்கூர் சரள்

கல்யாணி தாக்கூர் சரள் (பிறப்பு:1965) இந்தியாவைச் சேர்ந்த வங்காள மொழி தலித் பெண் கவிஞர் ஆவார்.[1] தலித் பெண்களின் விடுதலை, தலித் மக்களின் உரிமைகளுக்காக தீவிரமாக தொடர்ந்து தனது எழுத்து மூலம் வெளிப்படுத்தி வருகிறார்.

வாழ்க்கை மற்றும் எழுத்துப்பணி தொகு

மேற்கு வங்காள மாநிலம் நாடியா மாவட்டத்தின் பகுலாவில் 1965 ஆம் ஆண்டு பிறந்த கல்யாணி தாக்கூர் இளம் வயதிலிருந்தே எழுத்துப்பணி ஆற்றிவருகிறார்.எந்த வெளியீட்டாளரும் அவர் எழுதியதை வெளியிட விரும்பாததால் கல்யாணி தாக்கூர் தனியாக ஏழு புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.[2] ஒரு சுயசரிதை, நான்கு வங்காள மொழி கவிதை புத்தகங்கள், சிறுகதைத் தொகுப்பு மற்றும் கட்டுரைகளின் தொகுப்பு ஆகியவற்றை வெளியிட்டுள்ளார்.[3]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்யாணி_தாக்கூர்_சரள்&oldid=2926191" இலிருந்து மீள்விக்கப்பட்டது