களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்)

மயிலை சீனி வேங்கடசாமி எழுதிய வரலாற்று நூல்

களப்பிரர் ஆட்சியில் தமிழகம் மயிலை சீனி.வேங்கடசாமி என்பவரால் எழுதப்பட்ட புத்தகமாகும். பொதுவாக தமிழகத்தில் களப்பிரர் காலத்தை இருண்ட காலம் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் அதை மறுத்து களப்பிரர் வரலாற்றில் ஒளியைப் பாச்சுகிறார். களப்பிரரின் வழித்தோன்றல்கள் முத்தரையர் என்று இந்நூல் ஆசிரியர் எழுதியுள்ளார்.

களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
நூல் பெயர்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
ஆசிரியர்(கள்):மயிலை சீனி.வேங்கடசாமி
வகை:வரலாற்றாராய்ச்சி நூல்
மொழி:தமிழ்
பக்கங்கள்:143
பதிப்பகர்:நாம் தமிழர் பதிப்பகம்
பதிப்பு:மார்ச் 2010
ஆக்க அனுமதி:ஆசிரியருடையது

வாதம் தொகு

பல்லவர், சம்புவரையர், முத்தரையர், களப்பிரர் ஆகியவர்களை தமிழர் அல்லாதவர்கள் எனக்கூறுவது மூலம் தமிழரின் அடையாளத்தையும் வரலாற்றையும் சிலர் மறைக்கின்றனர் என்பது இப்புத்தக ஆசிரியரின் வாதமாகும்.