காஞ்சிப்பாடல்

வீட்டில் பிணம் கிடக்கும்போது இக்காலத்தில் தெருவில் ஆடிக்கொண்டு பாணர் இறந்தவரின் பெருமைகளைச் சொல்லிப் பாடுவதுவே காஞ்சிப்பாடல்.

தொல்காப்பியம் காஞ்சிப் பாடலை “இன்னன் என்று இரங்கிய மன்னை” எனக் குறிப்பிடுகிறது.[1] மன் என்னும் இடைச்சொல் கழிந்த பொருளுக்காக இரங்குதலைக் குறிக்கும்.[2] எனவே இதனைத் தொல்காப்பியர் மன்னைப்பாடல் என வகுத்துக்கொள்கிறார்.

அதியமான் இறந்தபோது ஔவையார் அவனது கொடையை எண்ணி இரங்கிப் பாடிய

சிறிய கள் பெறினே எமக்கு ஈயும் மன்னே
பெரிய கள் பெறினை
யாம் பாடத் தாம் மகிழ்ந்து உண்ணும் மன்னே
--- --- ---
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன் கொல்லோ [3]

என்னும் பாடலைத் தொல்காப்பிய மன்னைப் பாடலுக்கு எடுத்துக்காட்டாக உரையாசிரியர் இளம்பூரணர் அளித்துள்ளார்.

காஞ்சி என்னும் சொல் பகைவர்களை வென்று மாண்ட போர்வீரர்களைக் குறிக்கும்.[4]

அடிக்குறிப்பு தொகு

  1. புறத்திணையியல் 19
  2. தொல்காப்பியம் இடையியல் 4
  3. புறநானூறு 235
  4. காஞ்சி சான்ற வயவர் பெரும – பதிற்றுப்பத்து 65
"https://ta.wikipedia.org/w/index.php?title=காஞ்சிப்பாடல்&oldid=957181" இலிருந்து மீள்விக்கப்பட்டது