கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்
கார்மல் மேல்நிலைப்பள்ளி (Carmel Higher Secondary School) 1922 ஆம் ஆண்டு கத்தோலிக்க கிறித்தவ பாதிரிமார்களால் துவங்கப்பட்டப் பள்ளியாகும். இப் பள்ளி நாகர்கோவிலின் ராமன்புதூரில் அமைந்துள்ள ஆண்கள் பள்ளியாகும். இது தமிழ்நாட்டின் அரசால் அங்கீகரிக்கப்பட்டு, ஏறத்தாழ 50 ஏக்கர் பரந்த பசுமையான வளாகத்தில் அமைந்துள்ளது. பள்ளி தற்போது மதுரை மாகாணமான இயேசுசபையினரால் நிர்வகிக்கப்படுகிறது.
கார்மல் மேல்நிலைப்பள்ளி, நாகர்கோவில் | |
---|---|
முகவரி | |
ராமன்புதூர் நாகர்கோவில் கன்னியாகுமரி, தமிழ் நாடு, 629004 இந்தியா | |
தகவல் | |
வகை | அரசு உதவி பெறும் பள்ளி |
குறிக்கோள் | உயர்வை நோக்கி..... |
நிறுவல் | 1922 |
பள்ளி அவை | மேல்நிலை |
அதிகாரி | ஏசு சபை (கத்தோலிக்கம்) |
வகுப்புகள் | 6-12 |
கற்பித்தல் மொழி | தமிழ்,ஆங்கிலம் |
வரலாறு தொகு
இப்பள்ளி தமிழ் பேசும் கத்தோலிக்கர்களின் பயன்பாட்டிற்காக தங்கும் வசதிகொண்ட விடுதியுடன் ஆங்கில பாடசாலையாகத் துவங்கப்பட்டது. கோட்டாறு மறைமாவட்டம் உருவான பிறகு, 1936 ஆம் ஆண்டில் உயர்நிலைப் பள்ளி நிலைக்கு அது விரிவுபடுத்தப்பட்டது. பள்ளி கல்வி இயக்குனரின் கட்டுப்பாட்டின்படி, பள்ளிக்கூட விதிமுறைகளின்படி நிரந்தர அங்கீகாரம் (04-12-1934 இல் 1952 / Z117) வழங்கப்பட்டது. மதுரை மாகாண ஏசு சபையார் ஜூலை 1994 இல் இருந்து நிர்வகித்துவருகின்றார்கள்.
பாடத்திட்டம் சாரா செயல்பாடுகள் தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ "Security Check Required". www.facebook.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-08-24.