காலயவனன் என்பவர் பாகவத புராணததில் வரும் கதைமாந்தராவார்.[1] கார்கியர் எனும் அந்தணருக்கு சிவபெருமான் அருளிய வரத்தால் பிறந்தவர் காலயவனன். காலயவனனுக்கு ஆயுதங்களால் மரணமில்லை எனும் வரத்தைப் பெற்றவன். யவன அரசரிடம் வளர்ந்த காலயவனன் கிருஷ்ணனை அழிக்க முனைந்தார். யாதவர்களால் வெல்ல முடியாத வரத்தினைப் பெற்ற அரக்கன் என்பதால், கிருஷ்ணன் தந்திரம் செய்து, முசுகுந்தன் என்ற அரசன் பெற்ற வரத்தின் வலிமையால் கொன்றார்.[2]

காலயவனன்
காலயவனன் மற்றும் கிருஷ்ணர்
காலயவனன் மற்றும் கிருஷ்ணர்
Information
வம்சம் யவனர்
தந்தை கார்க்கியர்
தாய் ரம்பை

தொன்மக் கதை தொகு

கார்கியா எனும் பிராமணரை யாதவர்கள் அவமானப்படுத்தினர். அதனால் கோபம் கொண்ட பிராமணர், அவர்களை அழிக்க தனக்கு ஒரு மகன் வேண்டுமென நினைத்தார். அதற்காக சிவபெருமானை நோக்கி தவமிருந்து அந்த வரத்தினையும் பெற்றார். இவருக்குப் பிறந்த மகன் பலசாலியாக இருந்தான். அவனை யவன அரசர் ஒருவர் இளவரசனாக்கி கலைகளைக் கற்றுத் தந்தார். அவனுக்கு காலயவனன் என்று பெயரிட்டனர்.

சில காலத்தில் அரசனானதும் தன்னைவிட பலசாலியான அரசனைத் தேடி வெற்றிக் கொல்ல வேண்டுமென நினைத்தான். அப்போது கிருஷ்ணனினைப் பற்றி கேள்விப்பட்டு போருக்கு சென்றான். யாதவ குலத்தினரால் அவனை வெல்ல முடியாது என்பதை கிருஷ்ணர் அறிந்தார். அவனை இருண்ட குகையொன்றுக்கு அழைத்துவந்தார். அங்கு உறங்கிக் கொண்டிருந்த முசுகுந்தன் எனும் அரசனை காலயவனன் எழுப்பினார். தேவர்களுக்கு போரில் உதவி செய்து களைப்புற்றிருந்த முசுகுந்தனுக்கு ஆழ்ந்து தூங்கும் வரத்தினையும், அவ்வாறு தூங்கும் முசுகுந்தனை எழுப்புவன் எரிந்து சாம்பலாவான் என்றும் இந்திரன் வரமளித்திருந்தார். இதுதெரியாமல் உறங்கிக் கொண்டிருந்த முசுகுந்தனை எழுப்பிய காலயவனன் எரிந்து சாம்பலானான்.

வெளி இணைப்புகள் தொகு

ஆதாரங்கள் தொகு

  1. "Dinakaran - துனபஙகள் போககும துவாரகை மன்னன்". Archived from the original on 2015-01-23. பார்க்கப்பட்ட நாள் 2016-07-31.
  2. http://www.tamilvu.org/slet/l5100/l5100pd1.jsp?bookid=125&pno=204
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலயவனன்&oldid=3824041" இலிருந்து மீள்விக்கப்பட்டது