கிண்ணியாப் பாலம்

கிண்ணியாப் பாலம் (Kinniya Bridge) இலங்கையிலுள்ள மிக நீளமான பாலம் ஆகும். இதன் நீளம் 396 மீட்டர்கள் (1,299 அடி).[1] கிழக்கிலங்கையில் கொட்டியாறு மற்றும் தம்பலகாமக் குடாக்களிலுள்ள ஆற்றைக் கடக்கின்றது. இதன் மூலம் திருகோணமலையும் கிண்ணியாவும் இணைக்கப்பட்டு, மக்கள் கிண்ணியா ஆற்றைக் கடந்து ஏ15 நெடுஞ்சாலையிலுள்ள மூதூரையும் கிண்ணியாவையும் இலகுவாக அடைய முடிகின்றது. இப்பாலம் 2009 அக்டோபர் 20 இல் திறந்து வைக்கப்பட்டது.[2] இது சவுதி அரேபிய அரசாங்கத்தின் உதவியுடன் கட்டப்பட்டது.

கிண்ணியாப் பாலம்
Kinniya Bridge
கிண்ணியாப் பாலம்
போக்குவரத்து 2 பாதைகள்
தாண்டுவது கொட்டியாறு குடா மற்றும் தம்பலகாமம் குடா
இடம் மூதூர் - கிண்ணியா
வடிவமைப்பு பிடிமானப் பாலம்
மொத்த நீளம் 396மீ
அகலம் 10மீ
திறப்பு நாள் 20 அக்டோபர் 2009

உசாத்துணை தொகு

  1. "Declaring open the longest bridge in Sri Lanka President Rajapaksa says the time for racist politics has come to an end". இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சு. 2009. Archived from the original on 2012-09-24. பார்க்கப்பட்ட நாள் 15 ஆகத்து 2011.
  2. "President opens Kinniya bridge". priu.gov.lk. 2009. Archived from the original on 2012-02-11. பார்க்கப்பட்ட நாள் 15 ஆகத்து 2011.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கிண்ணியாப்_பாலம்&oldid=3549591" இலிருந்து மீள்விக்கப்பட்டது