கியூபாவின் உச்ச நீதிமன்றம்

கியூபா உச்ச நீதிமன்றம் என்பது கியூபா நாட்டு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அதிகார வரம்பினைக் கொண்ட உச்ச நீதிமன்றமாகும். இது நாட்டின் தலைநகர் அவானாவில் உள்ளது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அதன் அதிகார எல்லை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கியூபாவின் உச்சநீதிமன்றம்
நிறுவப்பட்டது1927
அமைவிடம்அவானா
அதிகாரமளிப்புகியூபா அரசியலமைப்புச் சட்டம்
நீதியரசர் பதவிக்காலம்65

நீதிமன்றத்தின் அரசியலமைப்பு தொகு

கியூபாவின் அரசியலமைப்பின் விதிமுறைகளின் படி நீதிமன்றம் முறையாக நிறுவப்பட்டது.

அமைப்பு தொகு

உச்சநீதிமன்றத்தில் ஒரு தலைமை நீதிபதி மற்றும் 12 துணை நீதிபதிகள் உள்ளனர். தலைமை நீதிபதி நாட்டின் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார். நீதிபதி ஆறு வருட காலத்திற்கு நியமிக்கப்படுகிறார். தற்போது, நீதிபதிகள் மூன்று தனித்தனி அறைகள் மூலம் வழக்குகளை நிர்வகிக்கிறார்கள்: குற்றவியல் வழக்குகளுக்கான அறை, நிர்வாக வழக்குகளுக்கான அறை மற்றும் சிவில் வழக்குகளுக்கான அறை. ஒவ்வொரு அறைக்கு முன்பும் வரும் வழக்குகள் பொதுவாக 5 நீதிபதிகள் கொண்ட குழுவால் கேட்கப்படுகின்றன.

மேற்கோள்கள் தொகு