கிரிசன் தேவ் திவான்

இந்தியச் சமூக சேவகர் மற்றும் சிறு விவசாயிகள் சங்கத்தின் நிறுவனர்

கிரிசன் தேவ் தேவன் (Krishan Dev Dewan) என்பவர் இந்தியச் சமூக சேவகர் மற்றும் வைசாலி பகுதி சிறு விவசாயிகள் சங்கத்தின் நிறுவனர் ஆவார். இது இந்திய மாநிலமான பீகாரில் உள்ள வைசாலியில் உள்ள விவசாயிகளின் நலனுக்கான ஒரு அரசு சாரா அமைப்பினைத் தோற்றுவித்தார்.[1] நிலோகேரியின் அகதி விவசாயிகளை சுயச்சார்புடையவர்களாக மாற்ற இவர் ஏற்பாடு செய்ததாக அறியப்படுகிறது.[2] வைசாலியில் இவரது செயல்பாடுகள் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பால் பட்டியலிடப்பட்டு, வளர்ச்சியில் மக்கள் பங்கேற்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.[3] இந்திய அரசு இவருக்கு 1986-ல் நாட்டின் நான்காவது மிக உயர்ந்த இந்தியக் குடிமகன் விருதான பத்மசிறீ விருதை வழங்கியது.[4]

கிரிசன் தேவ் திவான்
Krishan Dev Dewan
பிறப்புஇந்தியா
பணிசமூக சேவகர்
அறியப்படுவதுவைசாலி பகுதி விவசாயிகள் சங்கம்
பிள்ளைகள்எசு. கே. தவான், சுதீர் தவார், ஆசா சதுவுத்ரி, ராசீவ் திவான், வனிதா கபூர்
விருதுகள்பத்மசிறீ

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Vafsa, activities". Vafsa. 2015. பார்க்கப்பட்ட நாள் August 13, 2015.
  2. "Days 42,43, 63, 64, 67 Bihar". Vijay Mahajan. 2015. பார்க்கப்பட்ட நாள் August 13, 2015.
  3. "FAO Online Catalogues". FAO. 2015. பார்க்கப்பட்ட நாள் August 13, 2015.
  4. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on October 15, 2015. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிசன்_தேவ்_திவான்&oldid=3789084" இலிருந்து மீள்விக்கப்பட்டது