குச்சநாகன்

குச்சநாகன் அல்லது சூளநாகன் என்பவன் கிபி இரண்டாம் நூற்றாண்டில் அனுராதபுரத்தில் இருந்து இலங்கையை ஆண்ட மன்னன். இவன் 2 ஆண்டுகள் ஆட்சி செய்ததாக மகாவம்சம் கூறுகிறது.[1] ஆனாலும், இவனது ஆட்சிக்காலம் கிபி 179-181 என்றும்,[2] கிபி 193-195 என்றும்,[3] கிபி 183-185 என்றும்,[4] பலவாறாகக் கூறப்படுகிறது. இவனது தந்தையான கனிட்ட தீசன் என்பவனைத் தொடர்ந்து இவன் அநுராதபுரத்தின் ஆட்சியில் அமர்ந்தான்.

குச்சநாகன்
அனுராதபுர யுக அரசர்
ஆட்சி193 - 195
முன்னிருந்தவர்கனித்த திச்சன்
குஞ்சநாகன்
அரச குலம்முதலாம் லம்பகர்ண வம்சம்
தந்தைகனித்த திச்சன்

இவனது ஆட்சி குறுகிய காலமே இருந்ததால் இக்கால நிகழ்வுகள் குறித்து மகாவம்சம் விரிவாக எதுவும் கூறவில்லை. இவனது இரண்டு ஆண்டுகால ஆட்சியின் முடிவில் குட்டநாகன் அல்லது குஞ்சநாகன் என அறியப்பட்ட இவனது தம்பி இவனைக் கொன்றுவிட்டு அரசனானான்.

குறிப்புகள் தொகு

  1. Wijesinha, L. C. (translator), Mahavansa Part I, Asian Educational Services, New Delhi, 1996. p. 144.
  2. The Mahavamsa, Kings of Sri Lanka 131AD to 238AD
  3. LIST OF THE SOVEREIGNS OF LANKA
  4. Sri Lanka Genealogy Website – HISTORY, Kings & Rulers of Sri Lanka

இவற்றையும் பார்க்க தொகு

ஆட்சியாளர் பட்டியல், இலங்கை

"https://ta.wikipedia.org/w/index.php?title=குச்சநாகன்&oldid=1837807" இலிருந்து மீள்விக்கப்பட்டது