குத்சியா பேகம்

குத்சியா பேகம் ( Qudsia Begum; 1801 - 1881) 1819 ஆம் ஆண்டு முதல் 1837 ஆம் ஆண்டு தான் பதவி விலகும் வரை போபாலின் நவாப்பாக இருந்தார் [1] இவர் போபாலின் நவாப் கௌசு முகமது கானுக்கு பிறந்தார். 1817 இல், நாசர் முகமது கானை மணந்து, சிக்கந்தர் பேகம் என்ற மகளைப் பெற்றார். இவரது தந்தைக்கு பிறகு இவரது கணவர் பதவியேற்றார். 1819 இல், குத்சியா பேகம் தனது கணவருக்குப் பிறகு போபாலின் ஆட்சியாளரானார். 1837 இல், இவர் தனது மருமகனுக்கு ஆதரவாக பதவி விலகினார். தனது மருமகன், மகள் மற்றும் பேத்தி ஆகியோரின் ஆட்சியின் போது போபாலில் மாநில விவகாரங்களில் தொடர்ந்து செல்வாக்கு செலுத்தினார்.

போபாலின் நவாப் குத்சியா பேகம்

மேற்கோள்கள் தொகு

  1. The Begums of Bhopal: A Dynasty of Women Rulers in Raj India, by Shahraryar M. Khan. Published by I. B.Tauris, 2000. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-86064-528-3
"https://ta.wikipedia.org/w/index.php?title=குத்சியா_பேகம்&oldid=3908196" இலிருந்து மீள்விக்கப்பட்டது