கூட்டுறவு சங்க இலாபப் பிரிவினை

கூட்டுறவு சங்க இலாபப் பிரிவினை, தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம், 1983 மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் விதிகள், 1988 இன் படி மற்றும் சங்கத்தின் துணை விதிகளின்படியும், (by-law) ஒரு கூட்டுறவு சங்கம், வரிகள் மற்றும் சட்டபூர்வமான ஒதுக்கீடுகளுக்குப் பிறகு, ஈட்டிய நிகர இலாபத்தை சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தின் தீர்மானத்தின்படி பிரிவினை செய்ய வேண்டும்.

இலாபப் பிரிவினை தொகு

  1. கூட்டுறவு வளர்ச்சி நிதி 3%
  2. கூட்டுறவு கல்வி நிதி 2%
  3. சேமநிதி 20%
  4. உறுப்பினர் பங்கு ஈவுத்தொகை அதிக பட்சம் 12% முதல் 14% வரை
  5. ஊழியர் மிகை ஊதியம் (போனஸ்)
  6. கட்டிட நிதி 10%
  7. பொதுநல நிதி 10%
  8. பங்கு ஈவு சமப்படுத்தும் நிதி 10%
  9. மீதமுள்ள இலாபத்தை சங்கத் துணை விதிகளில் கூறியுள்ள நிதிகளுக்கு ஒதுக்க வேண்டும்
  10. அதிலும் மீதமிருக்கும் இலாபத்தை சேமநிதியில் சேர்க்க வேண்டும்.

இலாபப் பிரிவினை நிதிகளை முதலீடு செய்தல் அல்லது செலுத்துதல் தொகு

  • கூட்டுறவு வளர்ச்சி நிதி மற்றும் கூட்டுறவு கல்வி நிதியை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்திற்கு செலுத்த வேண்டும்.
  • சேமநிதியை, சங்கத்திற்கு நிதி உதவி வழங்கும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் முதலீடு செய்ய வேண்டும்.
  • பங்கு ஈவுத்தொகையை உறுப்பினர்களுக்கு பட்டுவடா செய்ய வேண்டும்.

மேற்கோள்கள் தொகு