கே. ராஜம்மாள் ராஜகோபால்

க. ராஜம்மாள் ராஜகோபால் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இராசிபுரத்திலுள்ள கல்வியியல் கல்லூரி ஒன்றில் முதல்வராகப் பணியாற்றி வருகிறார். முனைவர் பட்டம் பெற்றிருக்கும் இவர் “உயிரியல் கற்பிக்கும் முறைகள்”, “கற்பித்தல் மாதிரிகள் ஓர் அணுகுமுறை” போன்ற நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய “கல்வியியல் மதிப்பீடு புள்ளியியல் ஆராய்ச்சி” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் கல்வியியல், உளவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

கே. ராஜம்மாள் ராஜகோபால்
பிறப்பு(1955-05-12)மே 12, 1955
தேசியம்இந்தியா
அறியப்படுவதுஎழுத்தாளர்

எழுதிய நூல்கள் தொகு

  • கல்வியியல் மதிப்பீடு, புள்ளியியல், ஆராய்ச்சி
  • கற்பித்தல் மாதிரிகள் ஓர் அணுகுமுறை
  • உயிரியல் கற்பிக்கும் முறைகள்[1]

ஆதாரம் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ராஜம்மாள்_ராஜகோபால்&oldid=3614091" இலிருந்து மீள்விக்கப்பட்டது