கே. ராஜலிங்கம்

கே. ராஜலிங்கம் என அழைக்கப்பட்ட காளிமுத்து ராஜலிங்கம் (Kalimuthu Rajalingam, திசம்பர் 3, 1909 – பெப்ரவரி 11, 1963) இலங்கையின் மலையகத் தமிழ் அரசியல்வாதியும், தொழிற்சங்கத்தலைவரும், தமிழ் செயற்பாட்டாளரும் ஆவார்.[1][2]

ராஜலிங்கம் 1947 ஆகத்து 23 முதல் செப்டம்பர் 20 வரை நடைபெற்ற இலங்கையின் 1-வது நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[3] இத்தேர்தலில் இலங்கை தொழிலாலர் காங்கிரசில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஏழு உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.[4]

கல்கி ஆசிரியர் ரா. கிருஷ்ணமூர்த்தி இலங்கை வந்திருந்த போது ராஜலிங்கத்திற்கு 'மலையக காந்தி' என்ற பட்டம் சூட்டி, அவருடைய படத்தை 1950 செப்டம்பர் 10 கல்கி இதழில் அட்டைப் படமாக பிரசுரித்துக் கட்டுரை எழுதினார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Hon. Rajalingam, Kalimuthu, M.P." Directory of Past Members. இலங்கை நாடாளுமன்றம். Retrieved 8 October 2017.
  2. Peebles, Patrick (2015). Historical Dictionary of Sri Lanka. Rowman & Littlefield. p. 157. ISBN 9781442255852.
  3. "Result of Parliamentary General Election 1947" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 14 ஜூன் 2021. Retrieved 18 September 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. de Silva, Lakshmi (2 சூன் 2009). "Indian Tamils and Prabakaran’s Eelam: Seeking Tamil Nadu’s refuge after its betrayal". டெய்லி நியூசு. http://archives.dailynews.lk/2009/06/02/fea40.asp. பார்த்த நாள்: 6 அக்டோபர் 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ராஜலிங்கம்&oldid=3696877" இலிருந்து மீள்விக்கப்பட்டது