கைநாட்டு என்பது எழுதப்படிக்க தெரியாதவர்களை குறிப்பதாகும்.[1][2]. கைநாட்டு நபர்களை தற்குறி என்றும் அழைப்பர்.

கைநாட்டு வைத்தல் தொகு

எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் ஆவணங்களில் கையொப்பம் இடுவதிற்கு பதிலாக, தங்களின் இடது கை பெருவிரலை மையொற்றி எனப்படும் மைத்திண்டில் (Ink Pad) ஒற்றி எடுத்து, ஆவணங்களில் உரிய இடத்தில், இடது கை பெரு விரல் ரேகையை பதிக்கின்றனர். இடது கை இல்லாதவர்கள், வலது கை பெரு விரல் கைரேகையை ஆவணங்களில் பதிக்கின்றனர். ஒருவர் கைநாட்டு இட்டதற்கு சான்றாக, இருநபர்கள் தங்களின் பெயர், தந்தை பெயர் மற்றும் முழு முகவரியை எழுதி சாட்சி கையொப்பம் இடவேண்டும். அவ்வாறல்லாத ஆவணங்களை, வழக்குகளில் ஒரு ஆவணமாக நீதிமன்றங்கள் ஏற்பதில்லை.

மேற்கோள்கள் தொகு

  1. http://dictionary.reference.com/browse/illiterate
  2. கைநாட்டு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கைநாட்டு&oldid=3241708" இலிருந்து மீள்விக்கப்பட்டது