கைலாசகோனா அருவி

கைலாசகோனா அருவி (Kailasakona Falls) இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம், சித்தூர் மாவட்டத்தில் நாராயணவனம் என்ற இடத்தில் அமைந்திருக்கிறது. அருவிக்கு அருகில் சிவன் மற்றும் பார்வதி கோவில் உள்ளது. அருவி சுமார் 40 அடி உயரம் கொண்டதாகும்.[1] மலைப்பகுதிகளிலும் மூலிகைப்பகுதி வழியாகவும் தவழ்ந்து வருவதால் அருவி மருத்துவகுணம் நிறைந்ததாக இருக்கிறது. வருடம் முழுவதும் தண்ணீர் இருக்கும் என்பது இந்த அருவியின் சிறப்பாகும். இங்கு 3 நீர்வீழ்ச்சிகள் உள்ளன. சிவன் மற்றும் பார்வதி கோயிலுக்கு அருகில் உள்ள பிரதான நீர்வீழ்ச்சியைத் தவிர, நீர்வீழ்ச்சிக்கு வரும் பிரதான சாலையின் பாதியில் சுமார் 4 முதல் 6 அடி உயரம் கொண்ட இரண்டு சிறிய நீர்வீழ்ச்சிகள் உள்ளன. இந்த இரண்டு அருவிகளுக்கும் நடைபாதை சாலைகள் இல்லை.

எப்படி அடைவது தொகு

  • கைலாசகோனா அருவி ஊத்துக்கோட்டை - புத்தூர் - திருப்பதி சாலையில் அமைந்துள்ளது. நீர்வீழ்ச்சியை காரில் எளிதாக அடையலாம்.
  • கடப்பா-சென்னைக்கு தேசிய நெடுஞ்சாலையில் 40 கிமீ தொலைவில் இந்த அருவி அமைந்திருக்கிறது.
  • திருப்பதியிலிருந்து கைலாசகோணம் வரை 44 கி.மீ ஆகும்.

புற இணைப்புகள் தொகு

  1. "Kailasanatha Kona Tirupati, India | Best Time To Visit Kailasanatha Kona". www.tourtravelworld.com. பார்க்கப்பட்ட நாள் 2022-03-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைலாசகோனா_அருவி&oldid=3847189" இலிருந்து மீள்விக்கப்பட்டது