கோட்டம்பலம்

கோட்டம்பலம் என்பது சேரநாட்டில் இருந்த ஊர். இக்காலத்தில் இது கேரள மாநிலத்தில் அம்பலப்புழை என்னும் பெயருடன் விளங்குகிறது. கோடு என்றால் மலை. சேரநாடு மலைகளை மிகுதியாக உடைய நாடு. அம்பலம் என்பது ஊரின் பெயர்.[1]

சங்ககால மருத்துவ மனைகள் இருந்த ஊர்களில் இதுவும் ஒன்று. சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை இவ்வூரில் மருத்துவம் செய்துகொண்டான்.

அடிக்குறிப்பு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்டம்பலம்&oldid=1228834" இலிருந்து மீள்விக்கப்பட்டது