கோப்பி லுவாக்

புனுகுப்பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த ஆசிய மரநாய் சாப்பிட்டு எச்சமாகப் போடும் கோப்பி விதைகள் கோப்பி லுவாக்(Kopi Luwak) என்று அழைக்கப்படுகின்றன .[1]தேர்வு மற்றும் செரிமானம் மூலம் கோபி விதைகளை இது மேம்படுத்தும் என்று கோபிக்கொட்டை தயாரிப்பாளர்கள் வாதிடுகின்றனர் .[2]மற்றொரு புறம் , பூனைகளைக் கூண்டில் அடைப்பதால், அவற்றின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படுகிறது. காலாற நடப்பது, இணையுடன் சேருவது, பிடித்ததை வேட்டையாடி உண்பது, தன் வயதொத்த பூனைகளுடன் விளையாடுவது என்ற சுதந்திரம் பறிக்கப்பட்டு, பணம் சம்பாதிப்பதில் ஒத்துழைக்க வேண்டிய உயிருள்ள இயந்திரமாக மாற்றப்படுகின்றன என்று வாதிடுவோரும் உள்ளனர்.சில காலத்துக்குப் பிறகு, பூனைகள் இரையெடுக்கவே தயங்கும்போது கூண்டுகளிலிருந்து அவற்றை வெளியே விட்டுவிடுகிறார்கள். பனைமரக் காடுகளில் வசிக்கும் அந்தப் பூனைகள் காடுகளுக்குள் சென்ற உடனேயே இறந்துவிடுகின்றன என்றும் கூறப்படுகிறது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. Onishi, Norimitsu. "From Dung to Coffee Brew With No Aftertaste".
  2. Marcone, Massimo (2007), In Bad Taste: The Adventures And Science Behind Food Delicacies
  3. "உயர் ரக காபி வேண்டுமா?". தி இந்து. 15 நவம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 16 நவம்பர் 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோப்பி_லுவாக்&oldid=1769743" இலிருந்து மீள்விக்கப்பட்டது