கௌர பூர்ணிமா

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் பிறப்பைக் கொண்டாடும் ஒரு வைணவ திருவிழா

கௌர பூர்ணிமா என்பது கௌடிய வைஷ்ணவத்தை நிறுவிய ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் (1486-1534) தோற்றத்தைக் கொண்டாடும் ஒரு வைணவ திருவிழா ஆகும். இது இந்து மாதமான பால்குனாவில் பூர்ணிமாவில் (பௌர்ணமி நாளில்) நிகழ்கிறது, பொதுவாக மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் விழும். [1] [2]

கௌர பூர்ணிமா சைதன்ய மஹாபிரபுவின் நினைவாக கொண்டாடப்படுகிறது.

கௌரா பூர்ணிமா என்றால் "பொன் முழு நிலவு", சைதன்யாவைக் குறிக்கும். அவரைப் பின்பற்றுபவர்கள் இந்த பண்டிகையை உண்ணாவிரதம் இருந்தும் மற்றும் கூட்டமாக கீர்த்தனைகளைப் பாடியும் கொண்டாடுகின்றனர், பின்னர் சந்திர உதயத்தில் ஒரு விருந்து அனைவருக்கும் உண்டு. [3]

வரலாறு தொகு

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு , 1486 கி.பி. (1407 ஷகப்தா) பால்குணத்தில் (பிப்-மார்ச்) பால்குனி பூர்ணிமா அன்று ஸ்ரீ ஜகந்நாத் மிஸ்ரா மற்றும் ஸ்ரீமதி சசிதேவியின் மகனாக ஸ்ரீதாம் மாயாபூரில் தோன்றினார். அவரது வீட்டின் முற்றத்தில் இருந்த ஒரு நிம்பா (வேம்பு) மரத்தின் கீழ் பிறந்ததால் அவரது பெற்றோர் அவருக்கு நிமாய் என்று பெயரிட்டனர். இந்த விழா கௌடிய வைஷ்ணவர்களின் புத்தாண்டு தொடக்கத்தையும் குறிக்கிறது. [4]

கொண்டாட்டங்கள் தொகு

இவ்விழாவின் கொண்டாட்டங்கள் ஸ்ரீ ஸ்ரீ நிதாய் கௌரங்காவின் (சைதன்ய மஹாபிரபு மற்றும் பகவான் நித்யானந்தா) ஆகியோரின் பல்லக்கு உற்சவத்துடன் தொடங்குகின்றன. நீண்ட கீர்த்தனைகளுக்கு மத்தியில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் உற்சவ தெய்வங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன. ஊர்வலத்திற்குப் பிறகு, நிதாய் கௌரங்காவின் தெய்வங்கள் பல்வேறு பொருட்களால் அபிஷேகத்தைப் பெறுகின்றன. அவர்களின் திருவருள் முதலில் பஞ்சாமிர்தத்தாலும் பின்னர் பஞ்சகவ்யத்தாலும் நீராடப்பட்டு அதன்பின் பல்வேறு பழச்சாறுகள் கூடியிருப்பவர்களுக்கு வழங்கப்படுகிறது. பக்தர்கள் பிரம்மா-சம்ஹிதையில் இருந்து இறைவனை மகிமைப்படுத்தும் கீர்த்தனைகளை பாடுகிறார்கள். [5]

பக்தர்கள் காலை முதல் சந்திரன் உதிக்கும் வரை விரதம் இருந்து அனுகல்ப விருந்து (தானியமில்லாத பொருட்கள்) எடுத்து தங்கள் விரதத்தை கைவிடுகிறார்கள். மறு நாள், இறைவன் மற்றும் பக்தர்களுக்கு ஜகன்னாத் மிஸ்ரா விருந்து என்று அழைக்கப்படும் ஒரு சிறப்பு விருந்து வழங்கப்படுகிறது , இது ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் தந்தை தனது மகனின் பிறப்பைக் கொண்டாட ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்தார் என்பதால் அவரின் பெயராலே அழைக்கப்படுகிறது.

 
குழந்தைகளுடன் கீர்த்தனை

நபத்வீப் -மண்டல பரிக்கிரமாவின் ஒரு பகுதியாக இந்த விழா கௌடிய வைஷ்ணவர்களால் கொண்டாடப்படுகிறது. [6]

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Gaura Purnima". www.krishna.com. பார்க்கப்பட்ட நாள் 2018-05-31.
  2. "Gaura Purnima 2018". Archived from the original on 2018-02-21. பார்க்கப்பட்ட நாள் 2018-02-20.
  3. "iskcon.com - Culture - Gaura Purnima". Archived from the original on 2008-05-17. பார்க்கப்பட்ட நாள் 2008-04-01.
  4. "ஸ்ரீ கௌரா பூர்ணிமா". Archived from the original on 2018-02-21. பார்க்கப்பட்ட நாள் 2023-02-21.
  5. "Gaura Purnima 2018". Archived from the original on 2018-02-21. பார்க்கப்பட்ட நாள் 2018-02-20.
  6. "Gaura Purnima-ISKCON New Govardhana". www.newgovardhana.net. Archived from the original on September 7, 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-12-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌர_பூர்ணிமா&oldid=3664049" இலிருந்து மீள்விக்கப்பட்டது