சகலம் (சிற்பநூல்)

இந்தியச் சிற்ப மரபில் சகலம் அல்லது ஏகபதம் என்பது, 32 வகைகளாகச் சொல்லப்படும் தள அமைப்புக்களில் ஒன்று. மேற்படி வகைகளுள் மிக எளிமையானதும் இதுவே. இது ஒரேயொரு பதத்தை (நிலத்துண்டு) மட்டும் கொண்டது. இதனாலேயே இதை ஒருபதம் என்னும் பொருளில் ஏகபதம் என்கின்றனர். இதன் நான்கு பக்கங்களில் கிழக்குப் பக்கம் ஆதித்தனுக்கும் (சூரியன்), தெற்குப் பக்கம் யமனுக்கும், மேற்குப் பக்கம் வருணனுக்கும், வடக்குப் பக்கம் சந்திரனுக்கும் உரியது என மானசாரம் கூறுகின்றது.[1]

இந்த அமைப்பு கடவுளை வணங்குதல், யாகம் செய்தல், இருத்தல், சாப்பிடுதல் போன்ற தேவைகளுக்கான கட்டிடங்களுக்கு உகந்தது எனச் சிற்பநூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது.[2]

குறிப்புக்கள் தொகு

  1. Acharya, Prasanna Kumar., 2010. பக். 25.
  2. Acharya, Prasanna Kumar., 2010. பக். 25.

உசாத்துணைகள் தொகு

  • Acharya, Prasanna Kumar., Architecture of Manasara, Translated from Original Sanskrit Text, New Barathiya Book Corporation, Delhi, 2010.

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சகலம்_(சிற்பநூல்)&oldid=1603566" இலிருந்து மீள்விக்கப்பட்டது