யமன்

இந்து சமயம், பௌத்தம் ஆகியவற்றில் கூறப்படும் கடவுள்

யமன் (Yama) ( தேவநாகரி : यम) அல்லது யமராஜா (यमराज), மரணம், தர்மம், தெற்கு திசை மற்றும் பாதாள உலகம் ஆகியவற்றின் தெய்வமாகும். இந்து மற்றும் பௌத்த புராணங்களில் பிரதானமாக இடம்பெற்றுள்ள இவர் இருக்கு வேத இந்து தெய்வங்களின் ஆரம்ப அடுக்குக்கு சொந்தமாவார். [1] சமசுகிருதத்தில், இவரது பெயரை "இரட்டை" என்று பொருள் கொள்ளலாம்.[2] இவர் கலாசு மற்றும் முன்னர் நூரிஸ்தானி மக்களால் வணங்கப்பட்ட ஒரு முக்கியமான தெய்வமாவார். இது பண்டைய இந்து மதத்தில் இவரது முக்கியத்துவத்தைக் குறிக்கிறது.[3][4][5][6][7][8][9] இவர் நரகத்தின் அதிபதியாகவும் இறப்பவர்களுக்கு தீர்ப்பு அளிப்பவராகவும் இருக்கின்றார். பௌத்தர்கள் வணங்கும் யமனும் இந்து மதத்தில் வணங்கப்படும் யமனும் ஒரே தேவர்களாக இருப்பினும் இருவருக்குமான புராணக்கதைகள், கடமைகள், குணங்கள் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. பௌத்தம் பரவிய அனைத்து இடங்களிலும் இவருடைய வழிபாடு காணப்படுகின்றது.

யமன்
திக்பால யமனின் சிற்பம்.
வகைலோகபாலர்கள், கணங்கள், தேவர்
கிரகம்புளூட்டோ
ஆயுதம்தண்டக நாடு, சுருக்கு, மாகே
சகோதரன்/சகோதரிதபதி, யமி, ரேவந்தா, சனீஸ்வரன், வைவஸ்வதமனு, அஸ்வினிகள்
குழந்தைகள்சுனிதா, யமகுமாரன், தருமன் (ஆன்மீக மைந்தன்)

இந்து சமயத்தில், சூரியக் கடவுளான சூரியனுக்கும் [10] விசுவகர்மனின் மகள் சந்தியாவிற்கும் மகனாகச் சித்தரிக்கப்படுகிறார். மேலும், வைவஸ்வதமனு மற்றும் அவரது மூத்த சகோதரி யமியின் சகோதரரும் ஆவார் என்று கிழக்கத்திய ஆய்வாளர் எரேஸ் ஏமன் வில்சன் குறிப்பிடுகிறார். [11] வேதங்களின்படி, யமன் இறந்த முதல் மனிதர் என்று கூறப்படுகிறது. முன்னுரிமையின் அடிப்படையில், இவர் உலகை விட்டு பிரிந்தவர்களின் ஆட்சியாளரானார். [12] மேலும் "பித்ருக்களின் இறைவன்" என்றும் அழைக்கப்படுகிறார். [13]

தேரவாத பௌத்தத்தின் பாலி நியதியில் குறிப்பிடப்படும் யமன், கிழக்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் இலங்கையில் பௌத்த புராணங்களில் பல்வேறு ஒலிபெயர்ப்புகளின் கீழ் தர்மபாலராக குறிப்பிடப்படுகிறார். மற்றபடி "தர்மராஜா" என்றும் அழைக்கப்படுகிறார்.

படைப்பாளியாக யமனை வழிபடுதல் தொகு

வடமேற்கு இந்திய துணைக்கண்டத்தில் சுவாத் மாவட்டத்தில் சித்ரால் பகுதியில் 'சித்ராலி' மற்றும் கலாசு மொழியை பேசி வருகிறார்கள். இப்பகுதியில் தற்போது நடைமுறையில் உள்ள பண்டைய இந்து மதத்தில் கூட, சில தெய்வங்கள் ஒரு சமூகம்/பழங்குடி அல்லது மற்றொன்றில் மதிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. காம்விரியில் இம்ரோ என்று அழைக்கப்படும் பண்டைய இந்து கடவுளான யமராஜா மட்டுமே படைப்பாளராக உலகளவில் போற்றப்படுகிறார்.[14] பண்டைய பகுதியானது கில்கிட்-பால்டிஸ்தான், காஷ்மீர் மற்றும் நூரிஸ்தான் ஆகிய அருகிலுள்ள பகுதிகளுடன் வரலாற்று மற்றும் கலாச்சார தொடர்புகளைக் கொண்டிருந்தது. சிறீவத்ச/சுவஸ்து பகுதி சிறீவத்சவா குலத்தின் பிறப்பிடமாகவும் கூறப்படுகிறது.[15]

இந்து சமயம் தொகு

 
உதவியாளர்களால் சூழப்பட்டுள்ள யமன் ஒரு எருமையுடன் சித்தரிக்கப்படுகிறார்.

யமன், மரணம் மற்றும் நீதியின் இந்துக் கடவுளாகக் கருதப்படுகிறார். மேலும் இவரது வசிப்பிடமான நரக உலகத்தில்]] சட்டத்தை வழங்குவதற்கும் பாவிகள் தண்டிக்கப்படுவதற்கும் பொறுப்பானவர். பாந்தியனில் உள்ள பழமையான தெய்வங்களில் இவரும் ஒருவர். இவரது ஆரம்பகால தோற்றங்கள் சில இருக்கு வேதத்தில் காணப்படுகின்றன. அங்கிருந்து, இராமாயணம், மகாபாரதம், புராணங்களை உள்ளடக்கிய இந்து மதத்தின் மிக முக்கியமான சில நூல்களில் இவர் ஒரு குறிப்பிடத்தக்க தெய்வமாக இருந்து வருகிறார். [16] [17]

தெற்கு திசையின் பாதுகாவலராக நியமிக்கப்பட்ட லோகபாலர்களில் (திசைகளின் பாதுகாவலர்) யமனும் ஒருவர். யமன் நான்கு கைகள், நீண்டுகொண்டிருக்கும் கோரைப் பற்கள் மற்றும் கோபமான வெளிப்பாட்டுடன் புயல் மேகங்களின் நிறம் ஆகியவற்றைக் கொண்டவர் என்று விவரிக்கப்படுகிறது. சுடர் மாலையால் சூழப்பட்ட; சிவப்பு, மஞ்சள் அல்லது நீல நிற ஆடைகளை அணிந்து கொண்டிருப்பார். பாவம் செய்தவர்களின் ஆன்மாக்களைப் பிடிக்க நீர் எருமையின் மீது ஏறி வாள், கயிறு மற்றும் சூலாயுதம் ஆகியவற்றைப் பிடித்துக் கொண்டு வருவார் என்றும் விவரிக்கப்படுகிறார். புராணங்கள் இவரை யமியின் இரட்டை சகோதரர் என்றும், வாழ்க்கையுடன் தொடர்புடைய நதி தெய்வம் என்றும், சூரியக் கடவுள் சூரியன் மற்றும் சந்தியாவின் மகன் என்றும் விவரிக்கிறது. யமுனாவைத் தவிர, இவருக்கு அஸ்வினிகள், சனி, சிரத்ததேவ மனு, வைவஸ்வதமனு, ரேவந்தா மற்றும் தபதி போன்ற பல உடன்பிறப்புகளும் உள்ளனர். பாண்டவர், சத்தியவான் சாவித்திரி மற்றும் முனிவர் மார்க்கண்டேயர் ஆகியோரின் கதைகளில் இவரது சில முக்கிய தோற்றங்கள் இடம் பெற்றுள்ளது. இவரது உதவியாளர் சித்திரகுப்தர், மரணத்துடன் தொடர்புடைய மற்றொரு தெய்வமாவார். [18]

எமனின் வேறு பெயர்கள் தொகு

  • தருமன்
  • தருமதேவன்
  • எமராஜன் (எமம் என்றால் எருமைமாடு என பொருளாகும்)
  • காலதேவன்

பௌத்தம் தொகு

Yama is revered in Tibet as the Lord of Death and as a guardian of spiritual practice.
Yamantaka, 13th century, Japan.

பௌத்தத்தில், யமன் ( சமஸ்கிருதம் : यम) என்பது தர்மபாலராகவும், கோபம் கொண்ட கடவுள் அல்லது புத்தமதத்தின் அறிவொளி பெற்ற பாதுகாவலராகவும் கருதப்படுகிறது. [19] இறந்தவர்களை விசாரித்து நரகம் அல்லது சொர்க்கம், மறுபிறப்பு ஆகிய நிலைகளில் நிறுத்துபவர் என்றும் பௌத்தத்தில் கருதப்படுகிறார்.

இருப்பினும், பௌத்த யமன், இந்து தெய்வத்திலிருந்து வெவ்வேறு தொன்மங்களையும் வெவ்வேறு செயல்பாடுகளையும் உருவாக்கியுள்ளார். பாலி கானான் பௌத்த புராணங்களில், பெரியவர்கள், புனித ஆவிகள் அல்லது அவர்களின் பெற்றோரை தவறாக நடத்தியவர்களை யமன் அவர்கள் இறக்கும் போது அழைத்துச் செல்கிறார். மாறாக, புத்தகோசரின் மஜ்ஜிமா நிகாயா வர்ணனையில், யமன் ஒரு விமானபேட்டா - அவ்வப்போது துன்பம் கொண்ட ஒரு பிரேதம்- என விவரிக்கப்படுகிறார்.[20]

புத்த மதத்தின் மற்ற பகுதிகளில், யமனின் முக்கிய கடமை நரகத்தின் ( பாதாள உலகம்) சுத்திகரிப்பு அம்சங்களைக் கண்காணிப்பதாகும். மேலும் மறுபிறப்புடன் எந்தத் தொடர்பும் இல்லை. பல சீன மதங்களில் யமனின் பிரதிநிதித்துவத்தைப் போலவே பத்து நீதிமன்றங்கள் வழியாக செல்லும் ஆவிகளுக்கு இடையிலான உறவுகளைப் பராமரிப்பதே இவரது ஒரே நோக்கம். [21]

சீனா, கொரியா, வியட்நாம், ஜப்பான், பூட்டான், மங்கோலியா, நேபாளம், தாய்லாந்து, இலங்கை, கம்போடியா, மியான்மர் மற்றும் லாவோஸ் உட்பட பௌத்தம் கடைப்பிடிக்கப்படும் ஒவ்வொரு நாட்டிலும் இவர் பரவலாகப் பரவி உள்ளார்.

சீனா தொகு

சீன நூல்களில், யமன் நரகத்தில் இடைநிலைப் பதவிகளை மட்டுமே வகிக்கிறார். அங்கு இவர் இறந்தவரை மேற்பார்வையிடுபவராகவும், ஐந்தாவது நீதிமன்றத்தில் ஒரு மன்னராகவும் வைக்கப்படுகிறார். [21]

ஜப்பான் தொகு

822 இல் துறவி கெய்காயால் தொகுக்கப்பட்ட ஒரு இலக்கியப் படைப்பான நிப்போன்கோகு ஜென்போ ஜெனகு ரையோகி என்று அழைக்கப்படும் பழமையான ஜப்பானிய மதப் படைப்புகளில் யமனைப் பற்றி காணலாம். யமன் புத்த மதத்தின் மூலம் ஜப்பானுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். அங்கு இவர் ஒரு பௌத்த தெய்வமாக இடம்பெற்றார். மற்ற படைப்புகள் இவரை சித்தரிக்கும் அதே பதவி தலைப்பை இவர் வைத்திருக்கிறார் ( மற்றவர்களை தவறாக நடத்திய இறந்தவர்கள் மீது முடிவுகளை சுமத்தும் நீதிபதி போன்ற நிலை).

சரதுசம் தொகு

சரதுசத்தின் அவெஸ்தான் மொழியில் ஒரு இணையான பாத்திரம் " யிமா " என்று அழைக்கப்படுகிறது. [22] "யிமா" என்ற உச்சரிப்பு அவெஸ்தான் பேச்சுவழக்கில் தனித்தன்மை வாய்ந்தது; பழைய பாரசீகம் உட்பட பெரும்பாலான ஈரானிய பேச்சுவழக்குகளில், "யமா" என்று இருந்திருக்கும். அவெஸ்தாவில், யிமாவின் பாத்திரம் முதல் மனிதர்களில் ஒருவராகவும், மனிதர்களின் பெரிய மன்னனாகவும் வலியுறுத்தப்படுகிறது. காலப்போக்கில், *யமசைதா சிம்சித்த் அல்லது ஜம்ஷித் ஆக மாற்றப்பட்டது. இது உலகின் ஆரம்பகால ஷாக்களால் மிகப் பெரியதாகக் கொண்டாடப்பட்டது. சொராஷ்ட்ரியத்திலும், இந்து புராணங்களிலும் கூறப்படும் இரண்டு யமன்களும் நான்கு கண்கள் கொண்ட இரண்டு நாய்களின் உதவியுடன் நரகத்தை பாதுகாக்கின்றனர். [23] [24]

இதனையும் பார்க்கவும் தொகு

சான்றுகள் தொகு

  1. Ancient History Encyclopedia. Yama.
  2. Puhvel, Jaan (1989). Comparative Mythology. Baltimore and London: Johns Hopkins University Press. பக். 285–286. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0801839382. 
  3. Bezhan, Frud (19 April 2017). "Pakistan's Forgotten Pagans Get Their Due" (in ஆங்கிலம்). Radio Free Europe/Radio Liberty. பார்க்கப்பட்ட நாள் 11 July 2017. About half of the Kalash practice a form of ancient Hinduism infused with old pagan and animist beliefs.
  4. Barrington, Nicholas; Kendrick, Joseph T.; Schlagintweit, Reinhard (2006) (in en). A Passage to Nuristan: Exploring the Mysterious Afghan Hinterland. I.B. Tauris. பக். 111. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1845111755. "Prominent sites include Hadda, near Jalalabad, but Buddhism never seems to have penetrated the remote valleys of Nuristan, where the people continued to practise an early form of polytheistic Hinduism." 
  5. Weiss, Mitch; Maurer, Kevin (2012) (in en). No Way Out: A Story of Valor in the Mountains of Afghanistan. Berkley Caliber. பக். 299. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0425253403. https://archive.org/details/nowayoutstoryofv0000weis. "Up until the late nineteenth century, many Nuristanis practised a primitive form of Hinduism. It was the last area in Afghanistan to convert to Islam—and the conversion was accomplished by the sword" 
  6. http://www.people.fas.harvard.edu/~witzel/KalashaReligion.pdf [bare URL PDF]
  7. Jamil, Kashif (19 August 2019). "Uchal — a festival of shepherds and farmers of the Kalash tribe". Daily Times. p. English. பார்க்கப்பட்ட நாள் 23 January 2020. Some of their deities who are worshiped in Kalash tribe are similar to the Hindu god and goddess like Mahadev in Hinduism is called Mahandeo in Kalash tribe. ... All the tribal also visit the Mahandeo for worship and pray. After that they reach to the gree (dancing place).
  8. West, Barbara A. (2010) (in en). Encyclopedia of the Peoples of Asia and Oceania. Infobase Publishing. பக். 357. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1438119137. https://books.google.com/books?id=pCiNqFj3MQsC&pg=PA357. "The Kalasha are a unique people living in just three valleys near Chitral, Pakistan, the capital of North-West Frontier Province, which borders Afghanistan. Unlike their neighbors in the Hindu Kush Mountains on both the Afghani and Pakistani sides of the border the Kalasha have not converted to Islam. During the mid-20th century a few Kalasha villages in Pakistan were forcibly converted to this dominant religion, but the people fought the conversion and once official pressure was removed the vast majority continued to practice their own religion. Their religion is a form of Hinduism that recognizes many gods and spirits and has been related to the religion of the ancient Greeks... given their Indo-Aryan language, ... the religion of the Kalasha is much more closely aligned to the Hinduism of their Indian neighbors that to the religion of Alexander the Great and his armies." 
  9. Ghai, Rajat (17 February 2014). "Save the Kalash!". Business Standard India. https://www.business-standard.com/article-amp/opinion/save-the-kalash-114021700863_1.html. 
  10. Effectuation of Shani Adoration pp. 10–15.
  11. H.H. Wilson: The Vishnu Purana Volume 1, p. 384
  12. Arthur Anthony Macdonell (1995). Vedic Mythology. Motilal Banarsidass. பக். 172. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-8120811133. https://books.google.com/books?id=b7Meabtj8mcC&pg=PA172. 
  13. Shanti Lal Nagar: Harivamsa Purana Volume 1, p. 85
  14. Guillard, J.M. (1974). Seul chez les Kalash. Carrefour des Lettres.. 
  15. Encyclopaedia Indica: India, Pakistan, Bangladesh: Volume 100. 1996. 
  16. "Yama: The History of an Ancient God". Citragupta (in ஆங்கிலம்). Archived from the original on 2019-09-08. பார்க்கப்பட்ட நாள் 2021-03-17.
  17. "Yama". World History Encyclopedia. பார்க்கப்பட்ட நாள் 2021-03-17.
  18. "Lord Chitragupta - Who helps Lord Yamaraj to maintain karmic accounts". Detechter (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-12-05. பார்க்கப்பட்ட நாள் 2021-03-17.
  19. "Buddhist Protectors, Wisdom Deities (Dharmapala)". Himalayan Art Resources. பார்க்கப்பட்ட நாள் 2018-03-08.
  20. Guru, Shri Bhagavatananda (2015). A Brief History of the Immortals of Non-Hindu Civilizations. Notion Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1329586079. 
  21. 21.0 21.1 Teiser, Stephen F. (1996). The Ghost Festival in Medieval China. Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0691026777. 
  22. F. Max Müller (Editor): The Zend-Avesta Part III, p. 232
  23. "Indian Myth and Legend: Chapter III. Yama, the First Man, and King of the Dead". sacred-texts.com.
  24. Storytelling: An Encyclopedia of Mythology and Folklore. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=யமன்&oldid=3755754" இலிருந்து மீள்விக்கப்பட்டது