சத்தியபாமா
சத்தியபாமா திருமாலின் எட்டாவது அவதாரமான கிருஷ்ணரின் மனைவியருள் ஒருவர்.[1]இவர் பூமாதேவியின் அம்சமாக கருதப்பெறுகிறார். தன்னை ஈன்ற தாயால்தான் மரணம் நேரவேண்டும் என்று நரகாசுரன்(பூமாதேவியின் மகன்) எனும் அரக்கன் வரம் பெற்றிருந்ததாகவும், அதனால் கிருஷ்ணருக்கும் நரகாசுரனுக்கும் நடந்த போரில் சத்தியபாமா கிருஷ்ணனின் தேரோட்டியாக சென்று நரகாசுரரை வதைபுரிந்ததாகவும் வைணவ நூல்கள் கூறுகின்றன. [2]

மேலும் காண்க
ஆதாரங்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2013-09-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130927085815/http://vedabase.net/sb/10/83/9/en1.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2013-11-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131109031118/http://www.ammandharsanam.com/magazine/Deepavali2009unicode/page020.html.