சத்தீசு சந்திரா

சத்தீசு சந்திரா என்பவர் இந்தியாவைச் சேர்ந்த வரலாற்றாய்வாளர். இந்திய இடைக்கால வரலாற்றில் பரந்த அறிவு கொண்டவர். இடைக்கால இந்தியா என்ற இவர் எழுதிய நூல் பள்ளி மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் பாட நூலாக வைக்கப்பட்டுள்ளது.[1]

சத்தீசு சந்திரா

புதுதில்லி சவகர்லால் நேரு பல்கலைக் கழக வரலாற்றுப் பேராசிரியராக இருந்தார்.

பணிகள் தொகு

  • கோபால், பிபன் சந்திரா, ரூமிலா தாப்பர் ஆகிய வரலாற்றாசிரியர்களுடன் இணைந்து வரலாற்று ஆய்வு மையம் ஒன்றைத் தோற்றுவித்தார்.
  • பல்கலைக் கழக மானியக் குழுவில் உதவித் தலைவராகவும் தலைவராகவும் இருந்தார்.
  • இந்திய வரலாற்றுப் பேராயத்தில் செயலராகவும் தலைவராகவும் இருந்தார்.
  • ஆட்சிப் பணிகள் தேர்வுக் குழுவில் சதீசு சந்திரா தலைவராக அமர்த்தப்பட்டார்.

மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்தீசு_சந்திரா&oldid=2051888" இலிருந்து மீள்விக்கப்பட்டது