சபாத்து

இந்திய படைவீரர் குடியிருப்பு

சபாத்து (Sabathu) இந்திய மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சோலான் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு படைவீரர் குடியிருப்பு நகரமாகும். சுபாத்து என்றும் இந்நகரம் அழைக்கப்படுகிறது. ஆங்கிலோ-நேபாளப் போருடன் வரலாற்றுச் சிறப்புமிக்க தொடர்பைக் கொண்ட இந்நகரம் இப்போது இந்திய இராணுவத்தின் 1ஆவது கூர்க்கா சுழல்துப்பாக்கி படைப்பிரிவினர் மற்றும் 4ஆவது கூர்க்கா சுழல்துப்பாக்கி படைப்பிரிவினர் ஆகியவர்களின் குடியிருப்பு மையமாக உள்ளது.

புவியியல் தொகு

சபாத்து நகரம் கடல்மட்டத்திலிருந்து சராசரியாக 1265 மீட்டர் (4150 அடி) உயரத்தில் உள்ளது. [1]  

மக்கள்தொகை தொகு

2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சபாத்துவின் மக்கள் தொகை 8720 ஆக இருந்தது.[2] இம்மக்கள் தொகையில் ஆண்கள் சதவீதம் 47% ஆகவும், பெண்கள் சதவீதம் 53% ஆகவும் இருந்தது. சபாத்துவின் சராசரி கல்வியறிவு விகிதம் 86% ஆகும், இது தேசிய சராசரியான 59.5% என்பதை விட அதிகமாக இருந்தது. ஆண்களின் கல்வியறிவு 91% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 77% ஆகவும் இருந்தது. சபாத்துவின் மக்கள் தொகையில் 9% பேர் 6 வயதிற்குட்பட்டவர்களாகவும் இருந்தனர்.

பிரித்தானிய இராணுவப் படைகள் சிகிச்சை பெற்று குணமடைய சபாத்துவுக்குச் சென்றன. இது 19 ஆம் நூற்றாண்டில் ஒரு பிராந்திய தொழுநோயாளர் காலனியை கொண்டிருந்தது.

மேற்கோள்கள் தொகு

  1. Falling Rain Genomics, Inc - Sabathu
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சபாத்து&oldid=3920126" இலிருந்து மீள்விக்கப்பட்டது