சாகைங் மியான்மரின் சாகைங் பிரதேசத்தின் தலைநகராகும். இந்நகரம் மண்டலை நகரத்திலிருந்து 20 கிமீ தென்மேற்குத் திசையில் ஐராவதி ஆற்றின் கரையின் எதிர்புறத்தில் அமைந்திருக்கிறது. இங்கு பல தூபிக் கோவில்கள் மற்றும் புத்த மடங்கள் நிறைந்து உள்ளது. அதனால் இந்நகரம் ஆன்மிகம் மற்றும் புத்த மடங்களின் முக்கிய கேந்திரமாகவும் உள்ளது. ஐராவதி ஆற்றின் கரைகளுக்கு இணையாக புத்த மடங்கள் மற்றும் தூபிக் கோவில்கள் அமைந்துள்ளது.

சாகைங்
စစ်ကိုင်းမြို့
ஐராவதி ஆற்றுப் பாலம்
ஐராவதி ஆற்றுப் பாலம்
சாகைங் is located in Myanmar
சாகைங்
சாகைங்
Location in Burma
ஆள்கூறுகள்: 21°52′56″N 95°58′43″E / 21.88222°N 95.97861°E / 21.88222; 95.97861
நாடுமியான்மர்
பிரிவுசாகைங் பிரதேசம்
மக்கள்தொகை (2011)69,917
 • Religionsபெளத்தம்
நேர வலயம்MST (ஒசநே+6.30)

வரலாறு தொகு

சாகைங் இராச்சியத்தின் தலைநகரமாக இருந்தது (1315-1364), பகான் வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு தோன்றிய சிறிய இராச்சியங்களில் இதுவும் ஒன்று, திஹாதுவின் மகன்களில் ஒருவரான அத்திங்கியா தன்னை மன்னராக நிலைநாட்டினார். [1] அவா காலத்தின் போது (1364-1555), இந்த நகரம் இளவரசர் அல்லது மூத்த இளவரசர்களின் பொதுவான நகரமாக இருந்தது. 1760 ஆண்டு முதல் 1763 ஆண்டு வரையிலும் நாங்க்டாங்கி அரசரின் ஆட்சியில் இந்த நகரம் சிறிது காலத்திற்கு அரச தலைநகரமாக இருந்தது.

8 ஆகத்து 1988 அன்று, சாகைங் ஆர்ப்பாட்டங்களின் தளமாக இருந்தது. போராட்டம் படுகொலைகளில் முடிவுற்றது, இதில் 300 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். [2]

படக்காட்சியகம் தொகு

மேலும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. George Coedès (1968). Walter F. Vella. ed. The Indianized States of south-east Asia. trans.Susan Brown Cowing. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8248-0368-1. 
  2. "Irrawaddy article 1997". Archived from the original on 2010-10-04. பார்க்கப்பட்ட நாள் 2017-12-26.

வெளிப்புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகைங்&oldid=3677774" இலிருந்து மீள்விக்கப்பட்டது