சாண எரிவாயு

சாண எரிவாயு என்பது கால்நடைகளின் சாணத்திலிருந்து நொதித்தல் முறையில் தயாரிக்கப்படும் எரிபொருளாகும்.[1] இந்த நொதித்தல் முறைக்கென களன்கள் அமைக்கப்படுகின்றன. சாணத்தினை எரிவாயு கலனுக்குள் செலுத்தி மீத்தேன் என்ற எரிவாயுவினைப் பெருகின்றார்கள்.

இந்த எரிவாயுக் களன்கள் உட்செலுத்தும் குழாய், செரிப்பான், வாயு சேகரிப்பான், சாணக்கழிவுக் குழம்பு வெளியேறும் குழாய், எரிவாயு வெளியேரும் குழாய் ஆகிய பாகங்களைக் கொண்டுள்ளன.[1]

இந்தியாவில் தொகு

இந்தியாவில் மாற்று எரிசக்திக்கான சாண எரிவாயுவினை அமைக்க ஒன்றிய அரசு மானியங்களைத் தருகின்றது.[2] இவ்வாறு எரிசக்திக்கென வாயுக் கலன்கள் எண்ணற்ற வடிவமைப்பில் கிடைப்பதால், சில எரிவாயுக் கலன்களுக்கு மட்டும் ஒன்றிய அரசு மானியம் தருகிறது.

  • கிராமத் தொழில் ஆணைக்குழு இரும்பு டிரம் எரிவாயு கலன்
  • கதர் கிராம ஆணைக்குழு ஃபைபர் டிரம் எரிவாயு கலன்
  • கான்கிரீட் சுவர் டிரம் கலன் (பெரோ சிமெண்ட் வடிவம்)
  • பந்து வடிவ நிலையான கூடார கலன் (தீன பந்து வடிவம்)

ஆதாரங்கள் தொகு

  1. 1.0 1.1 "மாடு, ஆடு, கோழி கழிவிலிருந்து எரிவாயு... விகடன் 10/11/2013". Archived from the original on 2016-12-27. பார்க்கப்பட்ட நாள் 2016-07-11.
  2. சாண எரிவாயு அடுப்பு அமைக்க ரூ.8,000 மானியம் - தினமணி 05 டிசம்பர் 2012

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாண_எரிவாயு&oldid=3553330" இலிருந்து மீள்விக்கப்பட்டது