சிந்தாமோனி தோபா

மேற்கு வங்காளத்தின் முன்னாள் ஆட்சியாளர்

சிந்தாமோனி தோபா (Chintamoni Dhoba) (இறப்பு: பொ.ச 1300), இந்தியாவின் மேற்கு வங்காளத்திலுள்ள தல்பூம் பிராந்தியத்தின் ஆட்சியாளராக இருந்தார். அம்பிகாநகரில் (தற்போது பாங்குரா) தலைநகரை நிறுவினார். சிந்தாமோனி தோபி இனத்தைச் சேர்ந்தவர். இந்த பர்கானாக்களில் பயன்படுத்தப்படும் 'பை' அல்லது தானிய அளவு 'சிந்தமோன் பை' என்று அழைக்கப்பட்டது.[1]

சிந்தாமோனி தோபா
சிந்தாமோனி தோபா
முன்னையவர்கீழை கங்க வம்சத்தின் அனந்தவர்மன் சோடகங்கன்
பின்னையவர்ராஜா ஜெகன்னாத் தேவ்
இறப்புகி.பி. 1300
மதம்சமணம்

இவரது ஆட்சி குறுகிய காலத்திற்கே இருந்தது, பின்னர், இவரது இராச்சியம் இராசத்தானில் இருந்து தார் பர்மர் குலத்தின் ஜகன்னாத் தேவ் என்பவரால் இணைக்கப்பட்டது. இவரது குடும்பம் 700 ஆண்டுகள் இப்பகுதியை ஆட்சி செய்தது.

சான்றுகள் தொகு

  1. Office, West Bengal (India) Census; Mitra, Asok (1952) (in en). District Handbooks: Birbhum. s.n. Guha Ray. https://books.google.com/books?id=nLfc1iUL7ysC&q=Chintamani+Dhoba&dq=Chintamani+Dhoba. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்தாமோனி_தோபா&oldid=3648161" இலிருந்து மீள்விக்கப்பட்டது