சின்ன ஜீயர்

சின்ன ஜீயர் (Chinna Jeeyar) (பிறப்பு: 3 நவம்பர் 1956) ஸ்ரீவைஷ்ணவத்தின் தென்கலைப் மரபின் ஆன்மீக குரு ஆவார். நாராயண சாரியலு எனும் இயற்பெயர் கொண்ட சின்ன ஜீயர் தமது 23-வது அகவையில் பெரிய ஜீயர் மந்திர தீட்சை வழங்க துறவறம் பூண்டார். தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத் புறநகரத்தில் உள்ள முச்சிந்தலா கிராமத்தில், சம்சாபாத் வானூர்தி நிலையம் அருகில் உள்ள இவரது 40 ஏக்கர் ஆசிரம வளாகத்தில் 216 அடி உயரத்தில் நிறுவிய சமத்துவத்துக்கான இராமானுஜரின் பஞ்சலோகச் சிலையை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 5 பிப்ரவரி 2022 அன்று மாலை திறந்து வைத்தார்.[1][2][3][4]

சின்ன ஜீயர்
திரி தண்டி சின்ன ஜீயர்
பிறப்பு3 நவம்பர் 1956 (1956-11-03) (அகவை 67)
அர்த்தமூரு, கிழக்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இயற்பெயர்நாராயண சாரியலு
தேசியம்இந்தியர்
சமயம்வைணவம், இந்து சமயம்
தத்துவம்விசிட்டாத்துவைதம்
குருபெரிய ஜீயர்
http://www.chinnajeeyar.org/

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்ன_ஜீயர்&oldid=3734400" இலிருந்து மீள்விக்கப்பட்டது