சிரில் ஜான் இராட்கிளிப்

ராட்கிளிப் (Cyril John Radcliffe, 1st Viscount Radcliffe), (30 மார்ச் 1899 – 1 ஏப்ரல் 1977) பிரித்தானிய நாட்டின் வழக்கறிரும், நீதியரசரும் ஆவார். 1947-இல் பிரித்தானிய இந்தியாவை இந்தியா-பாகிஸ்தான் நாடுகளாக பிரிக்கும் போது நாடுகளின் எல்லைகளை வரையறுத்து வழங்கியவர். மேலும் இங்கிலாந்தின் வார்விக் பல்கலைகழகத்தின் துணை வேந்தராக 1965 – 1977 முடிய பதவி வகித்தவர்.

சர்
சிரில் ஜான் இராட்கிளிப்
வழக்கறிஞர்
பதவியில்
1949–1964
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
சிரில் ஜான் ராட்கிளிப்

(1899-03-30)30 மார்ச்சு 1899
லன்சிசான், வேல்ஸ், ஐக்கிய இராச்சியம்
இறப்பு1 ஏப்ரல் 1977(1977-04-01) (அகவை 78)
தேசியம்பிரித்தானியர்
துணைவர்அந்தோனியா மேரி ரூபி பென்சன்
முன்னாள் கல்லூரிஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
இந்தியத் துணைக்கண்டத்தில் பிரித்தானியக் குடியேற்ற நாடுகள் 1947, 1948 களில் விடுதலை அடைந்து இந்தியா, பர்மா, இலங்கை, பாகிஸ்தான் என நான்கு தனிநாடுகளாயின. தனிநாடாக இருந்த சிக்கிம் இவ்வரைபடத்தில் காட்டப்படவில்லை.

இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் 17 ஆகஸ்டு 1947 அன்று சிரில் ராட்கிளிப் தலைமையிலான எல்லை வரையறை ஆணையம்[1] இந்தியாபாக்கிஸ்தானைப் பிரிக்கும் எல்லைக்கோடுகளை வரையறை செய்து முடிவு செய்தது.[2]. எனவே இந்த எல்லைகோட்டிற்கு ராட்கிளிஃப் கோடு எனப்பெயர் பெற்றது.[3]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Boundary Commission
  2. p. 482, Read, A. and Fisher, D. (1997). The Proudest Day: India's Long Road to Independence. New York: Norton.
  3. How were the India-Pakistan partition borders drawn?

மேலும் படிக்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரில்_ஜான்_இராட்கிளிப்&oldid=3858222" இலிருந்து மீள்விக்கப்பட்டது