இவ்வாறு பெரும் உயிர்சேதம்உயிர்ச்சேதம் ஏற்பட்டதால் விழித்துக் கொண்ட காலனிய அரசு எதிர்காலத்தில் பஞ்சங்களை எதிர்கொள்ள பஞ்ச விதிகளை வகுத்தது. பஞ்சத்தின் கடுமையிலிருந்து தப்பிக்க தென்னிந்தியர் பலர், [[மொரீஷியஸ்]], [[பிஜி]], [[இலங்கை]], [[பர்மா]] போன்ற பிரிட்டனின் பிற காலனிகளுக்கு ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் புலம் பெயர்ந்தனர். அவர்களது வம்சாவளியினர் இன்றும் அந்நாடுகளில் வசித்து வருகின்றனர். பஞ்சத்தின் கடுமையும், ஆங்கில அரசின் மெத்தனமும் தேசிய உணர்வு கொண்ட இந்தியர்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கின. இந்தியர்களின் நலத்திற்காக [[டெல்லி]] ஆட்சியாளர்களை முழுதும் நம்பியிருக்க முடியாதென்பதை உணர்ந்த [[தாதாபாய் நௌரோஜி]] போன்ற தேசியவாதிகள், நேரடியாக பிரிட்டன் அரசிடம் மக்களின் பிரச்சனைகளை எடுத்துச் சொல்ல [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசை]] உருவாக்கினர்.<ref>{{Harvnb|Davis|2001|p=50-55}}</ref>