திருமுழுக்கு யோவான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி மாற்றல்: oc:Joan Batista
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: tr:Yahya; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 28:
'''புனித திருமுழுக்கு யோவான்''' ([[எபிரேய மொழி|எபிரேயம்]]: יוחנן המטביל, ''Yoḥanan ha-mmaṭbil'', {{lang-ar|يوحنا المعمدان}} ''Yūhannā al-maʿmadān'', [[அரமேய மொழி|அரமேயம்]]: ܝܘܚܢܢ ''Yoḥanan'')<ref>Wetterau, Bruce. ''World history''. New York: Henry Holt and company. 1994.</ref> (c. கி.மு. 6 - கி.பி. 28) என்பவர் [[இயேசு கிறித்து|கிறிஸ்து]]வின் முன்னோடியாக வந்த [[இறைவாக்கினர் (கிறித்தவம்)|இறைவாக்கினரும்]],<ref name="ODCC">Cross, F. L. (ed.) (2005) ''Oxford Dictionary of the Christian Church'', 3rd ed. Oxford University Press ISBN 978-0-19-280290-3, article "John the Baptist, St"</ref> [[கிறித்தவம்|கிறிஸ்தவ]] சமயத்தில் முக்கிய நபரும்<ref name = "ActJJohn">Funk, Robert W. & the Jesus Seminar (1998). ''The Acts of Jesus: the search for the authentic deeds of Jesus.'' San Francisco: Harper; "John the Baptist" cameo, p. 268</ref> ஆவார். [[மகனாகிய கடவுள்|இறைமகன்]] இயேசுவின் உறவினரான இவர்,<ref name="உறவு">[[லூக்கா நற்செய்தி|லூக்கா]] 1:36 "உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார்."</ref> [[யோர்தான் நதி]]யில் [[திருமுழுக்கு]] கொடுத்து வந்தார்.<ref name="Crossan, John Dominic 1998 p. 146">Crossan, John Dominic (1998). ''The Essential Jesus''. Edison: Castle Books; p. 146</ref> எனவே மற்ற 'யோவான்'களிடம் இருந்து, இவரைப் பிரித்து அடையாளப்படுத்தும் விதமாக 'திருமுழுக்கு' என்ற அடைமொழி இவரது பெயரோடு இணைக்கப்பட்டுள்ளது. [[இசுலாம்|இஸ்லாமில்]] இவர் ''யஹ்யா'' என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்.
 
== யோவானின் பிறப்பு ==
திருமுழுக்கு யோவானின் பிறப்பு பற்றிய செய்தி, [[லூக்கா நற்செய்தி]]யில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:
 
வரிசை 37:
எலிசபெத்துக்குப் பேறுகாலம் நெருங்கியது. அவர் ஒரு மகனைப் பெற்றெடுத்தார். ஆண்டவர் அவருக்குப் பெரிதும் இரக்கம் காட்டினார் என்பதைக் கேள்விப்பட்டுச் சுற்றி வாழ்ந்தோரும் உறவினரும் அவரோடு சேர்ந்து மகிழ்ந்தனர். எட்டாம் நாளில் அவர்கள் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வந்தார்கள்; செக்கரியா என்ற அதன் தந்தையின் பெயரையே அதற்குச் சூட்ட இருந்தார்கள். ஆனால் அதன் தாய் அவர்களைப் பார்த்து, "வேண்டாம், அதற்கு யோவான் எனப் பெயரிட வேண்டும்" என்றார். அவர்கள் அவரிடம், "உம் உறவினருள் இப்பெயர் கொண்டவர் எவரும் இல்லையே" என்று சொல்லி, "குழந்தைக்கு என்ன பெயரிடலாம்? உம் விருப்பம் என்ன?" என்று தந்தையை நோக்கிச் சைகை காட்டிக் கேட்டார்கள். அதற்கு அவர் எழுதுபலகை ஒன்றைக் கேட்டு வாங்கி, "இக்குழந்தையின் பெயர் யோவான்" என்று எழுதினார். எல்லாரும் வியப்படைந்தனர். அப்பொழுதே அவரது வாய் திறந்தது; நா கட்டவிழ்ந்தது; அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.<ref>[[லூக்கா நற்செய்தி|லூக்கா]] 1:57-64</ref>
 
== குழந்தைப் பருவம் ==
[[Fileபடிமம்:InfantJesus JohnBaptist.JPG|thumb|250px|right|''குழந்தைகளாக [[இயேசு கிறித்து|இயேசு]]வும் (இடது), யோவானும்''. ஓவியர்: முரில்லோ]]
திருமுழுக்கு யோவானைப் பற்றி அவரது தந்தை செக்கரியா, "குழந்தாய், நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்; ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை அவர்தம் மக்களுக்கு அறிவித்து ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த அவர் முன்னே செல்வாய்"<ref>[[லூக்கா நற்செய்தி|லூக்கா]] 1:76-77</ref> என்று இறைவாக்கு உரைத்தார்.
 
வரிசை 45:
பழங்கால கிறிஸ்தவ மரபுகளின்படி, யோவானின் பெற்றோர் அவரது சிறு வயதிலேயே இறந்து விட்டதாகவும், யோவான் பாலை நிலத்தில் வளர்ந்ததாகவும் கூறப்படுகிறது. இயேசுவை சுட்டிக்காட்டும் காலம் வரும் வரை, யோவான் பாலை நிலத்திலேயே வாழ்ந்து வந்தார்.<ref>[[லூக்கா நற்செய்தி|லூக்கா]] 1:76-77 'குழந்தையாயிருந்த யோவான் வளர்ந்து மனவலிமை பெற்றார். இஸ்ரயேல் மக்களுக்குத் தம்மை வெளிப்படுத்தும் காலம் வரை அவர் பாலை நிலத்தில் வாழ்ந்து வந்தார்.'</ref> தற்கால அறிஞர்கள், பாலைநிலத் துறவிகளாக வாழ்ந்த எஸ்சேனியர்களில் ஒருவராக யோவானும் இருந்திருக்கலாம் என்று கருதுகின்றனர். இயேசு பிறப்பதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய இந்த பாலைவனத் துறவிகள், தனிமையில் கடவுளை தியானித்து வந்ததோடு [[இசுரவேலர்|இஸ்ரயேலரின்]] மனமாற்றத்துக்கும் அழைப்பு விடுத்தனர். மனமாற்றத்திற்கு அடையாளமாக [[திருமுழுக்கு]] பெறும் சடங்கைத் தொடங்கி வைத்தவர்கள் இவர்களே<ref>Harris, Stephen L. (1985) ''Understanding the Bible''. Palo Alto: Mayfield; p. 382</ref> என்று நம்பப்படுகிறது.
 
== இறைவாக்கு பணி ==
"குரலொலி ஒன்று முழங்குகின்றது; பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள்"<ref>[[எசாயா (நூல்)|எசாயா]] 40:3</ref> என்று [[இறைவாக்கினர் (கிறித்தவம்)|இறைவாக்கினர்]] [[எசாயா (இறைவாக்கினர்)|எசாயா]] யோவானின் பணியைப் பற்றி எடுத்துரைத்துள்ளார்.
 
வரிசை 56:
"மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை"<ref>[[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] 11:11</ref><ref>[[லூக்கா நற்செய்தி|லூக்கா]] 7:28 "மனிதராய்ப் பிறந்தவர்களுள் யோவானைவிடப் பெரியவர் ஒருவருமில்லை."</ref> என்று [[இயேசு கிறித்து|இயேசு]]வே இவரைப் பற்றி புகழ்ந்து கூறி இருக்கிறார்.
 
== கொடிய மரணம் ==
'''திருமுழுக்கு யோவான்''' சாதாரண மக்களின் தவறுகளை மட்டுமின்றி, அதிகாரத்திலும் பதவியிலும் இருந்தவர்களின் நெறிகேடானச் செயல்களையும் [[தந்தையாம் கடவுள்|கடவுளின்]] பெயரால் கண்டித்தார். அவ்வாறே, குறுநில அரசன் ஏரோது தன் சகோதரனான பிலிப்பின் மனைவி ஏரோதியாவை மனைவியாக்கிக் கொண்டிருந்ததையும் யோவான் கண்டித்து வந்தார். ஏரோது, ஏரோதியாவின் பொருட்டு ஆளனுப்பி யோவானைப் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான். யோவான் நேர்மையும் தூய்மையும் உள்ளவர் என்பதை ஏரோது அறிந்து அஞ்சி அவருக்குப் பாதுகாப்பு அளித்து வந்தான். அவர் சொல்லைக் கேட்டு மிகக் குழப்பமுற்ற போதிலும், அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தான். இதனால் ஏரோதியா யோவான் மீது காழ்ப்புணர்வு கொண்டு, அவரைக் கொலை செய்ய விரும்பினாள்.
 
ஒரு நாள் ஏரோதியாவுக்கு நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்தது. ஏரோது தன் பிறந்த நாளில் அரசவையினருக்கும், ஆயிரத்தவர் தலைவர்களுக்கும் கலிலேய முதன்மைக் குடிமக்களுக்கும் ஒரு விருந்து படைத்தான். அப்போது ஏரோதியாவின் மகள் உள்ளே வந்து நடனமாடி ஏரோதையும் விருந்தினரையும் அகமகிழச் செய்தாள். அரசன் அச்சிறுமியிடம், "உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்" என்றான். அவள் வெளியே சென்று, "நான் என்ன கேட்கலாம்?" என்று தன்தாயை வினவினாள். அவள், "திருமுழுக்கு யோவானின் தலையைக் கேள்" என்றாள். உடனே சிறுமி அரசனிடம் விரைந்து வந்து, "திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இப்போதே எனக்குக் கொடும்" என்று கேட்டாள். இதைக் கேட்ட அரசன் மிக வருந்தினான். ஆனாலும் விருந்தினர்முன் தான் ஆணையிட்டதால் அவளுக்கு அதை மறுக்க விரும்பவில்லை. உடனே அரசன் ஒரு காவலனை அனுப்பி யோவானுடைய தலையைக் கொண்டுவருமாறு பணித்தான். அவன் சென்று சிறையில் அவருடைய தலையை வெட்டி, அதை ஒரு தட்டில் கொண்டுவந்து அச்சிறுமியிடம் கொடுக்க, அவளும் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள். இதைக் கேள்வியுற்ற யோவானுடைய சீடர்கள் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று ஒரு கல்லறையில் வைத்தார்கள்.<ref>[[மாற்கு நற்செய்தி|மாற்கு]] 6:21-29</ref>
 
== ஆதாரங்கள் ==
{{reflist|2}}
 
== வெளி இணைப்புகள் ==
{{Commons category|Saint John the Baptist|John the Baptist}}
* [http://www.newadvent.org/cathen/08486b.htm ''Catholic Encyclopedia'': St. John the Baptist]
வரிசை 82:
}}
 
[[Categoryபகுப்பு:விவிலிய நபர்கள்]]
[[Categoryபகுப்பு:இறைவாக்கினர்]]
 
[[an:Sant Chuan Baptista]]
வரிசை 156:
[[th:ยอห์นผู้ให้รับบัพติศมา]]
[[tl:San Juan Bautista]]
[[tr:Yahya (peygamber)]]
[[uk:Іван Хреститель]]
[[ur:یحییٰ علیہ السلام]]
"https://ta.wikipedia.org/wiki/திருமுழுக்கு_யோவான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது