கலம்காரி கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 13:
 
==வரலாறு==
கலம்காரி கலை மிகவும் பழமை வாய்ந்தது. இடைப்பட்ட காலத்தில் இக்கலை பெற்ற வளர்ச்சி வசதி படைத்த [[கோல்கொண்டா]] சுல்தானகம் மற்றும் [[ஐதராபாத்]] மன்னர்கள் ஆகியோரைச் சுற்றியே அமைந்திருந்தது. ஆந்திரபிரதேசத்தில் பல குடும்பங்கள் இக்கலையைஇக்கலையைத் தொழிலாகவும் வருவாயீட்டும் வழியாகவும் ஆக்கிக்கொண்டனர்.
 
கலம்காரி என்பது பேனாவைப் பயன்படுத்தித் துணியில் அழகுபடுத்தும் பழங்காலக் கலை. அழகிய வேலைப்பாடு மிகுந்த மாதிரியுருக் கோலங்களைத் (patterns) தாவரச் சாயங்கள் மூலம் வரையப்பட்ட அல்லது அச்சிடப்பட்டத் துணியைக்துணி வகையைக் குறிப்பதற்கு இந்தக் கலம்காரி என்ற சொல் முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டது. இவ்வகையான துணிகள் தற்போது இந்தியாவில் பல பகுதிகளிலும் தயாராகின்றன. எனினும் தென்மாவட்டங்களில் தான் இன்னமும் பழங்காலக் கலைமுறைப்படி தயாரிக்கப்படுவதால் கலம்காரி என்றால் அது தென்மாவட்டங்களில் தயாராகும் துணிகளையே குறிக்கிறது. பேனாவால் பல கோலங்கள் வரையும் கலை ஆந்திரபிரதேசத்தில் தான் தொழிலாக வளர்ந்து வருகிறது. அச்சிடப்பட்டத் துணிகளிலும் கூட நுண்ணிய மாதிரியுரு கோலங்கள் மற்றும் கண்கவர் வண்ணக்கலவைகள் எல்லாம் பேனாவினாலேயே வரையப்படுகின்றன. ஆந்திரபிரதேசத்தில் [[கடற்கரை ஆந்திரா]] மற்றும் கோல்கொண்டா பகுதிகளில் பணிபுரியும் கலம்காரி கலைஞர்களை ஆதரித்த முகலாயர்கள் ஒரு குறிப்பிட்ட பெயரில் இந்த துணிகளுக்குப் பெயரிட விரும்பினர். இவர்கள் இந்த வகை துணிகளுக்குச் சூட்டிய பெயர் கலம்கார் (Qua-lamkars) என்பதாகும்.<ref>{{cite web|last=Bhatnagar|first=Parul|title=Kalamkari|url=http://www.scribd.com/fullscreen/65619463?access_key=key-1i4e4emilphei76vaxgl|work=Traditional Indian Costumes and Textiles|publisher=suraj|accessdate=2004}}</ref>
 
பழங்காலத்தில் பாடகர்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் ஓவியர்கள் ஒரு குழுவாக இணைந்து கிராமம் கிராமமாகச் சென்று, மக்களிடம் [[இந்து சமயம்|இந்து சமய]] [[புராணம்|புராணக்]] கதைகளைச் சொல்லுவது வழக்கம். நாளடைவில் இந்தக் கதைகளைச் பெரிய ஓவியச்சீலைகளைகளில் (large bolts of canvas) சாயங்களைப் பயன்படுத்திக் காட்சிகளாக வரைந்து அவற்றின் உதவியோடு கதை சொல்லத் தொடங்கினர். இவ்வாறுதான் முதல் கலம்காரி ஓவியம் தோன்றியது. [[இந்து சமயம்|இந்துக்]] கோவில்களில் பெரிய ஓவியச்சீலைகளில் புராணக் கதைகள் கலம்காரி ஓவியங்களாக வரையப்பட்டுள்ளதைப் போன்றே வண்ணக் கண்ணாடிகளில் வரையப்பட்ட ஓவியங்கள் [[கிறித்தவம்|கிறித்துவ]] தேவலாயங்களிலும் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/கலம்காரி_கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது