சலாகுத்தீன் புகழ் அவரது வாழ்நாளில் மட்டும் அல்லாமல் நவீன உலகிலும் தொடர்கிறது. இன்னும் இவர் இசுலாமிய மக்களால் மிகவும் உயர்வாகப் போற்றப்படுகின்றார். குறிப்பாக [[இசுரேல்]] - [[பாலசுத்தீனம்பாலஸ்தீனம்]] பிச்சினை ஆரம்பமான பிறகு இவர் புகழ் வேகமாக பரவத் தொடங்கியது. இவர் தனது வாழ்நாளில் [[ஜெருசலம்ஜெருசலேம்|செருசலேம்]] நகரை கிறித்தவர்களிடம் இருந்து மீட்டதே இதற்குக் காரணம் ஆகும். இவரால் தோற்றுவிக்கப்பட்ட அயூபி பேரரசு இவரது மறைவுக்குப் பிறகு 57 ஆண்டுகள் தொடர்ந்தது. அது இன்றளவும் மறைமுகமாக நவீன உலகிலும் தொடர்கிறது. இதற்குச் சான்றாக, இவரது சின்னமான [[கழுகு]] முத்திரையே இன்றும் [[இராக்]], [[எகிப்து]], [[பாலசுத்தீனம்பாலஸ்தீனம்]] மற்றும் [[ஏமன்]] ஆகிய நாடுகளின் ராணுவ சின்னமாக உள்ளது.