திருநாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.4) (தானியங்கி மாற்றல்: th:แผ่นดินศักดิ์สิทธิ์ |
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: sw:Nchi takatifu; மேலோட்டமான மாற்றங்கள் |
||
வரிசை 1:
[[
'''திருநாடு''' (Holy Land) என்றும், '''புண்ணிய பூமி''' என்றும் அழைக்கப்படுகின்ற நிலப்பகுதி மேற்கு ஆசியாவில் யூத மதம், கிறித்தவம், இசுலாம், பாஹாய் ஆகிய சமயங்களுக்கு முதன்மை வாய்ந்த மண்டலமாக அச்சமயத்தவர்களால் கருதப்படுகின்ற நிலப்பரப்பைக் குறிப்பதாகும் <ref>[http://en.wikipedia.org/wiki/Holy_Land திருநாடு]</ref>. துல்லியமாக வரையறுக்கப்பட்ட எல்லைகளைக் கொண்டிராத இந்நிலப்பரப்பு எபிரேயத்தில்
{{main|எருசலேம்}}
இன்றைய நாட்டு எல்லைப்படி, '''திருநாடு''' என்பது இசுரயேல், பாலஸ்தீன ஆட்சி மண்டலம், யோர்தான், மற்றும் லெபனானின் சில பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கும். இவ்வாறு யூத மதம், கிறித்தவம், இசுலாம், பாஹாய் ஆகிய சமயங்கள் இந்நிலப்பகுதியைப் புனிதமாகக் கருதுவதற்கு ஒரு முக்கிய காரணம் அம்மதங்கள் [[எருசலேம்]] நகருக்கு அளிக்கின்ற சமய அடிப்படையிலான முதன்மை ஆகும்.
வரிசை 10:
விவிலியக் காலத்திலிருந்தே திருநாடு யூதர்களும் கிறித்தவர்களும் அதன் பின் இசுலாமியரும் திருப்பயணமாகச் செல்லும் முதன்மை இடமாக மாறியது.
== யூத சமயமும் திருநாடும் ==
[[
[[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டின்]] முதல் ஐந்து நூல்களாகிய "தோரா" (Torah) என்னும் பகுதியில் "திருநாடு" என்னும் பெயர் இல்லை. ஆனால், கடவுள் [[இசுரயேல்|இசுரயேலுக்கு]] ஒரு நாட்டை "வாக்களித்தார்" என்னும் கூற்று [[விவிலியம்|விவிலியத்தில்]] பல இடங்களில் உள்ளது. இசுரயேலின் பழங்கால நகரங்கள் "திரு நகரங்கள்" என்று குறிப்பிடப்படுகின்றன. இவ்வாறு குறிப்பிடப்படுகின்ற நான்கு "திரு நகரங்கள்" [[எருசலேம்]], [[எபிரோன்]], [[சாபத்]], [[திபேரியா]] என்பவை ஆகும். இவற்றுள் [[எருசலேம்|எருசலேமில்]] கோவில் அமைந்திருந்ததால் அது யூத சமயத்தின் புனித மையமாயிற்று.
வரிசை 20:
யூத மக்களின் நினைவில் எருசலேம் என்றால் புனித இடம் என்னும் உணர்வு ஆழப் பதிந்துள்ளது. தாவீது மன்னர் கடவுளுக்கு எருசலேமில் ஒரு கோவில் கட்ட முயன்றதும் மக்கள் உணர்வில் நிலைத்தது. இக்கருத்து [[1 சாமுவேல் (நூல்)|சாமுவேல் நூல்களிலும்]] [[திருப்பாடல்கள் (நூல்)|திருப்பாடல்கள்]] நூலிலும் சிறப்பாகத் துலங்குகின்றது. எருசலேம் பற்றிய தாவீதின் ஏக்கங்கள் பலவும் பல இறைவேண்டல்களிலும், பொதுமக்கள் பாடல்களிலும் இணைக்கப்பட்டுள்ளன். யூதர்கள் கொண்டாடும் பாஸ்கா விழாவின்போது அவர்கள் "அடுத்த ஆண்டு எருசலேமில் சந்திப்போம்" என்று கூறிப் பிரியாவிடை பெற்றுக்கொள்வார்களாம். எருசலேமை நோக்கி யூதர் இறைவேண்டல் செய்வது மரபு. "அழுகைச் சுவர்" (Wailing Wall) என்று அழைக்கப்படுகின்ற "மேற்குச் சுவர்" (Western Wall) என்பது பல நூற்றாண்டுகளாக யூதர்களின் திருப்பயணத் தலமாக விளங்கிவந்துள்ளது. இதுவும் "கோவில் மலையும்" யூதர்களின் மிகப் புனித தலங்களாகப் பல நூற்றாண்டுகள் கருதப்பட்டு வந்துள்ளன.
== கிறித்தவ சமயமும் திருநாடும் ==
[[
கிறித்தவர்களின் பார்வையில் '''திருநாடு''' என்னும் கருத்து ஆபிரகாமோடு தொடங்குகிறது.
{{cquote|ஆண்டவர் ஆபிராமுடன் ஓர் உடன்படிக்கை செய்து, 'எகிப்திலுள்ள ஆற்றிலிருந்து யூப்பிரத்தீசு பேராறு வரை உள்ள கேனியர், கெனிசியர், கத்மோனியர், இத்தியர், பெரிசியர், இரபாவியர், எமோரியர், கனானியர், கிர்காசியர், எபூசியர் ஆகியோர் வாழும் இந்நாட்டை உன் வழிமரபினர்க்கு வழங்குவேன்' என்றார். (தொநூ 15:18-21).}}
வரிசை 28:
{{cquote|ஆண்டவருடைய தூதர் எகிப்தில் யோசேப்புக்குத் தோன்றி, 'நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இசுரயேல் நாட்டுக்குச் செல்லும். ஏனெனில் குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் இறந்து போனார்கள்' என்றார். எனவே, யோசேப்பு எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிகொண்டு இசுரயேல் நாட்டுக்கு வந்து சேர்ந்தார் (மத் 2:19-21).}}
திருநாடு என்னும் கருத்து நிலப்பரப்பு சார்ந்தது மட்டுமல்ல, மாறாக நிலப்பரப்போடு இறையியல் கருத்தும் இணைந்துதான் திருநாடு உருவாகிறது.
குறிப்பாக, [[எண்ணிக்கை (நூல்)|எண்ணிக்கை நூலில்]] திருநாடு என்னும் கருத்து முதன்மையாக உள்ளது. அங்கே கடவுளின் "புனித" மக்கள் குடியேறினார்கள். [[யோசுவா (நூல்)|யோசுவா நூலின்]] கடைசிப் பகுதியில் நாட்டின் பகுதிகள் இசுரயேலின் குலங்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும் நிகழ்ச்சி உள்ளது. இவ்வாறு, கடவுள் முன்னோருக்கு அளித்த வாக்குறுதி நிறைவேறுகிறது. அவர்கள் பெற்றுக்கொண்ட நாடும் "திருநாடாக" மாறுகிறது.
வரிசை 35:
கிறித்தவர்கள் திருநாட்டில் கீழ்வரும் இடங்களை உள்ளடக்குவர்:
* [[எருசலேம்]]: இங்கு இயேசு மக்களுக் கற்பித்தார். தாம் துன்புற்று இறப்பதற்கு முந்திய இரவில் தம் சீடர்களோடு கடைசி இரா உணவை அங்கு அருந்தினார். தம் சீடரோடு உணவுண்ட போது அப்பத்தையும் இரசத்தையும் எடுத்து அவை தம் உடலும் இரத்தமுமாக உள்ளன என்று கூறி, அவர்தம் நினைவாக அச்செயலைத் தொடருமாறு தம் சீடரிடம் கூறினார். எருசலேமுக்கு அருகிலுள்ள கொல்கதா என்னும் குன்றில் (கல்வாரி) இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்துறந்தார். இயேசுவின் உடல் வைக்கப்பட்ட கல்லறையின் மீது கட்டப்பட்ட "திருக்கல்லறைக் கோவில்" எருசலேமில் உள்ளது. மேலும் "அனைத்து நாடுகளுக்குமான கோவில்" அங்கு அமைந்துள்ளது. வேறு பல கிறித்தவ நிறுவனங்களும் எருசலேமில் உள்ளன.
* [[பெத்லகேம்]]: இங்குதான் [[இயேசு]] [[மரியா (இயேசுவின் தாய்)|மரியாவுக்குக்]] குழந்தையாகப் பிறந்தார். "இயேசு பிறப்புக் கோவில்" இங்குள்ளது.
* [[நாசரேத்து]]: இயேசு வளர்ந்த ஊர். இங்கு பல திருத்தலங்கள் உள்ளன. "மங்கள வார்த்தைக் கோவில்" மற்றும் "மரியாவின் கிணறு" இங்கு இருக்கின்றன.
[[சிலுவைப் போர்|சிலுவைப் போர்கள்]] நிகழ்ந்த காலத்தில் கிறித்தவ திருப்பயணிகள் திருநாட்டுக்குச் சென்று அங்கு இறைவேண்டல் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். எருசலேமையும் பிற புனித இடங்களையும் இசுலாமியரிடமிருந்து விடுவிப்பதும் அப்போர்களின் நோக்கமாயிருந்தது.
மேலே குறிப்பிட்ட இடங்கள் தவிர கிறித்தவர் புனிதமாகக் கருதும் தலங்கள் இவை:
* செப்போரியா (Sephoria): இங்கு இயேசுவின் தாய் மரியா தம் குழந்தைப் பருவத்தைக் கழித்ததாகக் கூறப்படுகிறது.
* இயேசு திருமுழுக்குப் பெற்ற யோர்தான் ஆறு.
* திருமுழுக்கு யோவான் தங்கியிருந்ததாகக் கருதப்படும் பாறைக் குகை.
* இயேசு பணி புரிந்த பகுதியாகிய [[கலிலேயக் கடல்]].
* இயேசு தோற்றம் மாறிய தாபோர் மலை.
* [[நல்ல சமாரியன் உவமை|நல்ல சமாரியர் கதையோடு]] தொடர்புடைய [[எரிகோ]] நகரம்.
== இசுலாமும் திருநாடும் ==
[[
"திருநாடு" பற்றி திருக்குரானில் பல குறிப்புகள் உள்ளன<ref>[http://www.tamililquran.com/ தமிழில் திருக்குரான்.]</ref> எடுத்துக் காட்டாக,
{{cquote|(தவிர, அவர்) “என் சமூகத்தோரே! உங்களுக்காக அல்லாஹ் விதித்துள்ள புண்ணிய பூமியில் நுழையுங்கள்; இன்னும் நீங்கள் புறமுதுகு காட்டி திரும்பி விடாதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் நஷ்ட மடைந்தவர்களாகவே திரும்புவீர்கள்” என்றும் கூறினார் (5:21).}}
இசுலாமிய வரலாற்றின் முதல் சில மாதங்களில் [[எருசலேம்|எருசலேமில்]] அமைந்திருந்த [[அல் அக்சா பள்ளிவாசல்|அல்-அக்சா மசூதியை]] நோக்கி தொழுகை நிகழ்ந்தது. பின்னரே [[காபா]] நோக்கி தொழுகை செய்யும் வழக்கம் ஏற்பட்டது. எருசலேமும் [[அல் அக்சா பள்ளிவாசல்|அல்-அக்சா மசூதியும்]]
எருசலேமில் சீனாய் மலையை அடுத்துள்ள பள்ளமான பகுதியை முசுலிம்கள் "துவா" (Tuwa) என்று அழைக்கின்றனர். அதற்கு "புனித பள்ளத்தாக்கு" என்று பொருள். திருக்குரான் கூறுவது:
வரிசை 67:
மேலும், முசுலிம்கள் "திருநாடு" என்று [[மெக்கா]], [[மதீனா]], [[காபா]] ஆகிய இடங்களையும் குறிப்பர்.
== பாஹாய் சமயமும் திருநாடும் ==
[[
[[இசுரயேல்|இசுரயேலில்]] ஹைஃபா மற்றும் ஆக்கர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள பாஹாய் உலக மையம் அச்சமயத்தவரால் "திருநாடு" என்று கருதப்படுகின்றது<ref>[http://en.wikipedia.org/wiki/Bah%C3%A1%27%C3%AD_World_Centre பாஹாய் உலக மையம்.]</ref>
== ஆதாரங்கள் ==
{{reflist}}
வரிசை 119:
[[sr:Света земља]]
[[sv:Det heliga landet]]
[[sw:Nchi takatifu]]
[[th:แผ่นดินศักดิ์สิทธิ์]]
[[tr:Kutsal Topraklar]]
|