'''பொன்மலர்பொன் மலர்''' எழுத்தாளர் [[அகிலன்]] உருவாக்கிய புதினங்களுள் ஒன்று. [[அகிலன்]] பல புதினங்களைப் படைத்திருந்தாலும், அவரது சமுதாயப் புதினங்களுள், பொன்மலர் ஒரு சிறந்த இடத்தைப் பெற்றுள்ளது. [[ராணிமுத்து]] இதழின் முதல் புதினமாக வெளிவந்து பல இலட்சம் பிரதிகள் விற்பனையானது. ரஷ்ய, சீன, ஆங்கில மொழிகளிலும் இந்தியாவின் பெரும்பாலான மாநில மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு புத்தகவடிவில் வெளியான [[புதினம்]]. பல கல்லூரிகளில் பாடப் புத்தகமாகத் திகழ்ந்த இப்புதினம் வானொலி நாடக வடிவிலும் ஒலி பரப்பான பெருமை பெற்றது.<ref>எழுத்தாளர்அகிலன் எழுதித் தமிழ்ப் புத்தகாலயம் வெளியிட்ட பொன் மலர் புத்தகத்தில் [[கி. வா. ஜெகந்நாதன்]] அவர்களின் சிறப்புரை</ref>