உஜ்ஜைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 29:
 
== வரலாறு ==
உஜ்ஜயினி என்னும் பெயரில் இந் நகரம் பற்றிய குறிப்பு [[புத்தர்]] காலத்திலிருந்தே கிடைக்கிறது. அக்காலத்தில் இது அவாந்தி அரசின் தலைநகரமாக இருந்தது. கிமு 4ஆம் நூற்றாண்டில் இந்துப் புவியியலின் முதல் நெடுங்கோடாகக் கொள்ளப்பட்டது. பிற்காலத்தில் மௌரியப் பேரரசனான [[அசோகன்]] [[மௌரியப் பேரரசு|மௌரியப் பேரரசின்]] மேற்கு மாகாண அரசப் பேராளனாக இருந்தபோது உஜ்ஜயினியிலேயே வாழ்ந்தான். மௌரியர் காலத்துக்குப் பின்னர் உஜ்ஜைனைச் [[சுங்கர்]]களும், [[சாதவாகனர்]]களும் ஆண்டனர். சிறிதுகாலம் சாதவாகனர்களும், [[மேற்குச் சத்திரப்பு]]கள் என அறியப்பட்ட [[இந்திய-சித்தியர்]]களான [[சாகர்]]களும் இந் நகருக்காகப் போட்டியிட்டனர். சாதவாகன மரபு முடிவுக்கு வந்தபின்னர் கிபி 2-4 ஆம் நூற்றாண்டுகள் வரை இந் நகர் சாகர்களிடம் இருந்தது. [[குப்தர்]]கள் சாகர்களிடமிருந்து கைப்பற்றிய பின்னர் இது குப்தப் பேரரசின் முக்கிய நகரங்களில் ஒன்றானது. விக்கிரமாதித்தன் எனப்பட்ட [[இரண்டாம் சந்திரகுப்தன்|இரண்டாம் சந்திரகுப்தனின்]] மரபுவழித் தலைநகரமாக இது கருதப்பட்டது. இவனது அரசவையிலேயே [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]] இலக்கியத்தின் ஒன்பது மணிகள் என்று கொள்ளத்தக்க [[புலவர்]]கள் ஒன்பதின்மர் இருந்ததாக அறியப்படுகிறது.
 
===உஜ்ஜைன் அடையாளம்===
"https://ta.wikipedia.org/wiki/உஜ்ஜைன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது