கர்தினால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
 
கர்தினால் குழாமின் உறுப்பினர்களாக்கப்பட்ட கீழைச்சபை மறைமுதுவர்கள் தங்களுடைய மறைமுதுவர் ஆட்சிப்பீடத்தை உரிமைத் தகுதியாய்க் கொண்டுள்ளனர். எனவே இவர்களுக்கு உரோமை ஆலயங்களின் உரிமைத்தகுதி வழங்கப்படாது.
 
==பிற சிறப்புத்தகுதிகள்==
கர்தினால்கள் ஒண்சிவப்பு வண்ண (scarlet) உடைகளை அணியும் தகுதி பெறுகின்றனர். இவ்வண்ணம் தங்களின் நம்பிக்கைக்காக இரத்தம் சிந்தும் அளவுக்கு துணிந்தவர்கள் என்பதக்குறிக்கும்.<ref>Pope Benedict ... He told them that the red signifies the dignity of their new office and that they must be ready "even to the point of spilling your blood for the increase of the Christian faith, for peace and harmony among the people of God, for freedom and the spread of the Holy Roman Catholic Church."</ref><ref>[http://www.belfasttelegraph.co.uk/news/local-national/article3196655.ece Applause and tears in Basilica greet Pontiff] (26 November 2007) ''Belfast Telegraph''. Retrieved 2008-06-01. Quote: "In a ceremony televised across the world cardinal-elect Sean Brady knelt before Pope Benedict XVI and pledged his allegiance to the Church before receiving his special red birretta — a symbol of a cardinal's dignity and willingness to shed blood for the increase of the Christian faith."</ref>
 
இவர்கள் கர்தினாலாக்கப்படும் போது, திருத்தந்தையினால் ஒரு முத்திரை மோதிரம் வழங்கப்படும். இதன் வெளிப்புரத்தில் திருத்தந்தையினால் தெரிவு செய்யப்படும் புனிதர்களின் படமும், உட்புரத்தில் [[திருத்தந்தையரின் ஆட்சி முத்திரை]]யும் பொறிக்கபட்டிருக்கும்.
 
உரோமை நகருக்கும் தங்கள் சொந்த மறைமாவட்டத்திற்கும் வெளியே தங்கியுள்ள கர்தினால்கள் தாங்கள் தங்கியிருக்கும் மறைமாவட்ட ஆயரின் ஆட்சிக்கு உட்பட்டவர்கள் அல்ல. ஆகவே இவர்களுக்கெதிரான வழக்குகள் திருத்தந்தையினால் மட்டுமே விசாரிக்கப்பட முடியும். ஆயினும் இது இவர்கள் தங்கியிருக்கும் நாடுகளின் அரசியல் சட்டங்களுக்கு பொறுந்தாது. இவர்கள் அந்நாட்டின் அரசியல் சட்டங்களுக்கு உட்பட்டவர்களே. திருத்தந்தையினால் அனுமதிக்கப்பட்டால் ஒழிய திருச்சபையின் உச்ச நீதிமன்றத்திற்கும் (Roman Rota) கூட இவர்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் உரிமை இல்லை. இவ்வகை வழக்குகளை விசாரிக்க பொதுவாக திருத்தந்தை உரோமைச் செயலக தலைவர்களைக்கொண்ட ஒரு குழுவினை அமைத்து விசாரிப்பார். இக்குழுவின் பரிந்துரைகளின் பேரில் திருத்தந்தை தீர்ப்பு வழங்குவார்.
 
இவர்களின் பதவிக் கேடயத்தின் மேல்பகுதியில் சிவப்பு நிற விரிதொப்பியும், தொப்பியின் இருபக்கங்களிலும் முறையே 15 குஞ்சங்கள் தொங்கும். குறிக்கோளுரையும் இணைக்கப்படுவது வழக்கம்.
 
==கர்தினாலின் பணிகள்==
"https://ta.wikipedia.org/wiki/கர்தினால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது