'''குலவை''' என்பது தமிழர்கள்[[தமிழர்]]கள் எழுப்பும் மங்கல ஒலி ஆகும். இது பெரும்பாலும் பெண்களால் எழுப்பப்படும். கைகளை வாயருகே வைத்த நிலையில் உதடுளைக் குவித்து வைத்து நாக்கினைக் கிடைமட்டமாக இரு புறமும் அசைப்பதன் மூலம் உலுலுலுலுலுலு... என்ற குலவை ஒலி உண்டாக்கப்படும். நாற்று நடவு, அறுவடை போன்ற [[உழவு]] வேலைகளின் போதும் [[பூப்புனித நீராட்டு விழா|பூப்புனித நீராட்டு]] போன்ற இல்ல நன்னிகழ்வுகளின் போதும் இறை வழிபாட்டின் போதும் குலவை போடுதல் நடைபெறும்.