திருத்தந்தையின் பணி துறப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
 
==வரலாற்றில் பணியினை துறந்த திருத்தந்தையர்கள்==
1045 ஆம் ஆண்டு, [[ஒன்பதாம் பெனடிக்ட் (திருத்தந்தை)|ஒன்பதாம் பெனடிக்ட்]] காசுக்காக தனது பதவியினைத் துறந்தார். இவரிடமிருந்து திருச்சபையை காக்க இவருக்கு பணமளித்து இவரை பணி துறக்க கட்டயாப்படுத்திய [[ஆறாம் கிரகோரி (திருத்தந்தை)|ஆறாம் கிரகோரி]] இவருக்குப்பின் திருத்தந்தையானார். ஆயினும், ஆறாம் கிரகோரியின் செயல் பெரும்பாவமாக (simony) கருதப்பட்டதால் அவரும் தானாகவே பணியினைத் துறந்தார். இவருக்குப்பின் திருத்தந்தையான [[இரண்டாம் கிளமெண்ட் (திருத்தந்தை)|இரண்டாம் கிளமெண்டின்கிளமெண்ட்]] 1047இல் இறந்ததால் ஒன்பதாம் பெனடிக்ட் மீண்டும் திருத்தந்தையானார்.
 
நன்கறியப்பட்ட திருத்தந்தையின் பணி துறப்பு [[ஐந்தாம் செலஸ்தீன் (திருத்தந்தை)|ஐந்தாம் செலஸ்தீன்]] 1294இல் செய்தது ஆகும். இவரை கட்டாயப்படுத்தி திருத்தந்தையாக்கியதாலும், அக்காலத்தில் திருத்தந்தை பணி துறப்பினைப்பற்றி எந்த சட்டமும் இல்லாததாலும், திருத்தந்தை பணி துறப்பு என்பது நிகழ முடியத ஒன்றாகக் கருதப்பட்டதாலும், இவர் திருத்தந்தையான 5 மாதங்களுக்குப் பின்பு 'ஒரு திருத்தந்தைக்கு தனது பணியினை துறக்க அதிகாரம் உண்டு' என சட்டம் இயற்றி, அதனைப்பயன்படுத்தி தனது பணியினைத் துறந்தார். இதற்குப்பின் இரண்டு வருடங்கள் இவர் வனவாசியாக வாழ்ந்து மரித்தார். இவருக்கு [[புனிதர் பட்டமளிப்பு|புனிதர் பட்டம் அளிக்கப்படுள்ளது]] என்பது குறிக்கத்தக்கது. .
"https://ta.wikipedia.org/wiki/திருத்தந்தையின்_பணி_துறப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது