உலகிலேயே [[லிசியே நகரின் தெரேசா|புனித குழந்தை இயேசுவின் திரேசாளுக்கு]] கட்டபட்ட முதல் ஆலயம் கண்டன்விளையில்[[கண்டன்விளை]]யில் அமைந்துள்ள '''புனித குழந்தை இயேசுவின் திரேசாள் ஆலயம்'''. 1929-ஆம் ஆண்டு இவ்வாலயம் அர்ச்சிக்க பட்டு அதே ஆண்டு திருவிழாவும் கொண்டாடப் பட்டது. இந்த ஆலயம் [[கன்னியாகுமரி மாவட்டம்]], [[நாகர்கோவில்]]-திங்கள்நகர் நெடுஞ்சாலையில் நாகர்கோவிலிருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.இந்த ஆலயத்தில் ஒலிக்கும் மணிகள் திரேசாளின் சொந்த சகோதரிகளால் வாங்கி அனுப்பப் பட்டவை. புனிதையின் பேரொளிக்கம் மக்களின் வணக்கத்திற்காக ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் திருவிழா செப்டம்பர் மாதம் கடைசி வெள்ளி கொடியேற்றத்துடன் 10 நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.