கடோபநிடதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''கடோபநிடதம்''' எனும் [[உபநிடதம்]] கிருட்டிண யசூர் வேதத்தில் அமைந்துள்ளது. இதற்கு [[ஆதிசங்கரர்]], [[இராமானுசர்]], [[மத்வர்]] ஆகிய மகான்கள் உரை எழுதி உள்ளனர். 119 மந்திரங்களைக் கொண்ட இந்த உபநிடதத்தை இரண்டு அத்தியாங்களாகவும் ஒவ்வொரு அத்தியாமும் மூன்று பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு பகுதிகளை வல்லிகள் என்று அழைக்கப்படுகின்றது. இந்த உபநிடதம் கதை வடிவில் அமைந்துள்ளதால் இதற்கு கடோபநிடதம் என்பர்.
 
==இவ்வுபநிடதத்தின் சாந்தி மந்திரம், விளக்கம்==
வரிசை 12:
==உபநிடத சாரம்==
''விச்வஜித்'' என்ற யாகத்தை செய்த ஒருவன் யாக முடிவில் தனது அனைத்து செல்வங்களையும் தானமாக தர வேண்டும் என்பது அந்த யாக விதி. ஆனால் அந்த யாகத்தை செய்த வாஜச்ரவசு என்பவன், தனது வயதான பசுக்களை மட்டும் தானமாக தருவதை கண்ட அவன் மகன் நசிகேதன் தன்னை யாருக்கு தானமாக கொடுப்பீர்கள் என அடிக்கடி தனது தந்தையை நோக்கி கேட்க, தந்தையும் எரிச்சலுடன் உன்னை எமனுக்கு தானமாக கொடுக்கிறேன் என்று கூறிவிட, உடனே நசிகேதன் எமலோகத்திற்கு சென்று, மூன்று பகல் இரவுகள் பசியுடன் காத்திருந்து யமதேவரை சந்திக்கின்றான். யமலோகத்திற்கு விருந்தாளியாக வந்த நசிகேதனை காக்க வைத்த காரணத்தால் [[யமன்]], நசிகேதனுக்கு மூன்று வரங்கள் தருகிறார். முதல் வரத்தின் மூலம் தனது தந்தை மனஅமைதி அடைந்து தன்னை மீண்டும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று வேண்டுகிறான். எந்த ஒரு யாகத்தை செய்தால் மக்கள் சுவர்க்க லோகம் அடையமுடியும் என்பதை இரண்டாம் வரத்தின் மூலம் நசிகேதன் தெரிந்து கொள்கிறான். மூன்றாவது வரத்தின் மூலமாக, உடல் அழிந்த பின்னும் அழியாது இருக்கின்ற ஆத்ம தத்துவத்தைப் பற்றிய அறிவை உபதேசிக்கும் படி வேண்டுகிறான். முதல் இரண்டு வரங்களை நசிகேதனுக்கு உடனே வழங்கிய [[யமன்]], மூன்றாவது வரத்தை தருவதற்கு முன் அதற்கான தகுதி நசிகேதனுக்கு உள்ளதா என யமதேவர் சோதிக்கிறார். சுவர்க்கலோகம், பிரம்மலோகம் செல்வதற்கு வழி சொல்கிறேன் என்று யமதேவர் கூறியும், நிலையற்ற அந்த லோகங்கள் வேண்டாம் என்று ஒதுக்கித்தள்ளி தனக்கு நிலையான பிரம்மக்ஞானம் ஒன்றே போதும் என்று நசிகேதன் உறுதியாக கூறி விடுகிறான். இறுதியில் யமதர்மராசன் வைத்த அனனைது சோதனைகளிலும் வெற்றி பெற்ற நசிகேதனுக்கு ஆத்ம தத்துவத்தை விளக்கமாக யமதேவர் எடுத்து கூறினார். இந்த ஆத்மதத்துவம் எனும் பிரம்ம தத்துவத்தை அறிந்தவர்கள் உயிருடன் இருக்கும் போதே ஜீவமுக்தி அடைந்து பின்பு மரணத்திற்குப்பின் விதேக முக்தி பிறப்பில்லாத பேரின்ப பெருவாழ்வு [[வீடுபேறு]] / [[மோட்சம்]] அடைகிறார்கள் என்று யமதேவர் கூறினார்.
-----------------------------------------------------------------------------------------------
 
==மேலும் பார்க்க==
* [[ஈசா வாஸ்ய உபநிடதம்]]
* [[தைத்திரீய உபநிடதம்]]
* [[மாண்டூக்ய உபநிடதம்]]
* [[முண்டக உபநிடதம்]]
* [[கைவல்ய உபநிடதம்]]
* [[கேன உபநிடதம்]]
* [[சாந்தோக்ய உபநிடதம்]]
 
==துணை நூல்கள்==
* ஆங்கிலத்தில் உபநிடதங்கள் [[http://www.sacred-texts.com/hin/index.htm]]
"https://ta.wikipedia.org/wiki/கடோபநிடதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது