உடையார் பாளையம் (பாளையம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Sodabottle, உடையார்பாளையம் இராசதானி பக்கத்தை உடையார்பாளையம் சமீன் என்ற தலைப்புக்கு வழிமாற்று இ...
No edit summary
வரிசை 1:
தமிழ்நாட்டில் உள்ள பழைய ஜமீன்களுள் '''உடையார்பாளையம்''' ஒன்று. இதன் அதிபர்களாகிய 'காலாட்கள் தோழ உடையார்கள்' தங்கள் படைகளுடன் தங்கிய இடமாதலின் இதற்கு உடையார் பாளையம் என்னும் பெயருண்டாயிற்று. [[வன்னியர்]]கள் "காலாட்கள் தோழ உடையார்" என்ற பட்டபெயருடன் [[அரியலூர் மாவட்டம்]] உடையார்பாளையம் பகுதியில் ஆட்சி செய்து வந்தனர். அதன் அடையாளமாக 25 ஏக்கர் பரப்பில் அரண்மனையும், பீரங்கி, துப்பாக்கி, வாள்கள், வேல்கம்புகள், அம்பாரி, பல்லக்கு உள்ளிட்ட பொருட்கள் அங்கு உள்ளன. [[உ. வே. சாமிநாத ஐயர்]] உள்ளிட்ட அறிஞர்களை உடையார்பாளையம் அரசர்கள் ஆதரித்தனர்.
 
==ஜமீன் சரித்திரம்==
வடதமிழகத்தின் மிகப்பெரிய 'பாளையம்' உடையார்பாளையம். நாயக்க மன்னர்கள் பற்றிய வரலாறுகளில் உடையார்பாளையம் பற்றிய பல குறிப்புகள் காணப்படுகின்றன.காஞ்சியைப் பூர்வீகமாகக் கொண்ட இவர்களை பிரம்ம சத்திரியர்கள் என்று விளந்தை கல்வெட்டு(கி.பி. 18ஆம் நூற்றாண்டு) கூறுகிறது.இவர்கள் வன்னிய மரபினர் மற்றும் பிச்சாவரம் சோழர்களின் சம்மந்திகள்.காஞ்சிபுரத்தை பல படையெடுப்புகளில் இருந்து காத்தவர்கள்.இதனை போற்றும் வகையில் காஞ்சி திரு வரதராஜப்பெருமாள் கோயிலில் இன்று வரை 'உடையார்பாளையம் உற்சவம்' கொண்டாடப்படுகிறது.கங்கைகொண்டசோழபுரம் திரு பிரகதீசுவரர் ஆலயம் சுமார் 400 ஆண்டுகளாக இவர்களது ஆளுகையில் இருந்து வந்தது. அக்கோயிலின் கோபுரக் கலசங்கள் மற்றும் சிங்கமுக கிணறு ஆகியவை உடையார்பாளையம் அரசர்களின் கொடையாகும். இவர்கள் பழைமையான கோயில்கள் பலவற்றை புதுப்பித்ததுடன் புதிய ஆலயங்களையும் எழுப்பியுள்ளனர்.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/உடையார்_பாளையம்_(பாளையம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது